உளுந்து கழிவுகளில் வருமானம் ஈட்டும் விவசாயிகள்!

Published On:

| By admin

விருதுநகர் மாவட்டம், தாயில்பட்டி பகுதிகளில் உளுந்து கழிவுகளை விற்று விவசாயிகள் வருமானம் ஈட்டிவருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தாயில்பட்டி, பூசாரிநாயக்கன்பட்டி, ஜமீன்கல்லமநாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, சுப்பிரமணியபுரம், இறவார்பட்டி, வல்லம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்தப் பகுதியில் உளுந்து அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்ட உளுந்து கழிவுகள் மாட்டு தீவனத்துக்காக கிலோ ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த உளுந்து கழிவுகள் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு சத்தான உணவாக குறைந்த விலைக்குக் கிடைப்பதால் அருகில் உள்ள கிராமங்களில் கால்நடை வளர்ப்பவர்கள் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.
இந்த நிலை குறித்து பேசியுள்ள விவசாயிகள், “தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உளுந்தினை சாகுபடி செய்து அறுவடை செய்து விட்டோம். செடியில் இருந்து உளுந்தினை பிரித்து விட்டு மீதி உள்ள கழிவுகளை விற்று வருகிறோம். கால்நடை வளர்ப்பவர்கள் அவற்றுக்கு உணவுக்காக இதை வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் உபரி வருமானம் கிடைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது” என்று கூறியுள்ளனர்.

**-ராஜ்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share