ராஜன் குறை Unstable justice in Strange cases
சென்ற வாரம் விசாரிக்கப்பட்ட இரு வழக்குகள் வினோதமானவை; தீர்ப்புகள் விசித்திரமானவை. ஒன்று தமிழ்நாடு உயர்நீதி மன்றம் விசாரித்த மாநில அரசு இயற்றிய சட்ட த்திற்கு எதிரான வழக்கு; மற்றொன்று ஹரியானா அரசு ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்துக்களுக்காக அசோகா பல்கலைகழக பேராசிரியரை கைது செய்த வழக்கு. இந்த இரண்டு வழக்குகளும் விசாரிக்கப்பட்ட முறையும், வழங்கப்பட்ட தீர்ப்பும் பல கேள்விகளை எழுப்புகின்றன. Unstable justice in Strange cases
மற்றொரு வழக்கான அமலாக்கத் துறையின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு தடை கோரிய தமிழ்நாட்டு அரசின் வழக்கில், உச்சநீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், அது செயல்படும் விதம் குறித்த கண்டனங்களையும், விமர்சனங்களையும் தெரிவித்துள்ளது. இந்த மூன்று வழக்குகளும் சுட்டிக் காட்டும் பொதுவான அம்சம் என்னவென்றால் அரசியலமைப்பு சட்டம் பல்வேறு விதங்களில் நெருக்கடிக்கு ஆளாவதைத்தான். Unstable justice in Strange cases
அமலாக்கத் துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியது PMLA Act என்ற சட்டபூர்வமற்ற பணபரிவர்த்தனை குறித்த கடுமையான சட்டம் ஒன்றுதான். அது குற்றச்செயல் புரியும், போதைப் பொருட்களைக் கட த்தும் கும்பல்களின் ஹவாலா பணப்பரிமாற்றங்களை தடை செய்ய உருவாக்கப்பட்ட ஒரு கருப்புச் சட்டம். அதன் கீழ் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தால்கூட பிணை வழங்காமல் சிறை வைக்கலாம். இந்த சட்டத்தை பயன்படுத்தி அரசியல் தலைவர்களை கைது செய்யும் போக்கு பாஜக அரசில் நடைமுறையாகியுள்ளது.
ஈடி (ED – Enforcement Directorate) என்று அழைக்கப்படும் அமலாக்கத் துறை ஆளும் கட்சியால் அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தப் படுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கு ஆதாரமாக பல்வேறு வழக்குகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. தேர்தல் நிதி பத்திரங்களை ரகசியமாக அளிக்க ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அமலாக்கத்துறை ரெய்டு நட த்திய தொழில் நிறுவனங்கள் பாஜக கட்சிக்கு நிதியளித்துள்ள தகவல்கள் பின்னர் உச்சநீதிமன்றத்தின் ஆணையின் பேரில் வெளியாயின. Unstable justice in Strange cases
ஈடி ரெய்டு நடந்த பிறகு பின்னர் எந்த விளக்கமும் தரப்படுவதில்லை; வழக்குகளும் போடப்படுவதில்லை என்னும்போது, இந்த நடவடிக்கை அச்சுறுத்தலாக மாறுகிறதா என்ற கேள்வி எழுகிறது. எதிர்கட்சித் தலைவர்கள் என்றால் ஈடி ரெய்டு வரும் என்பது சமூகத்தின் பொதுப்புத்தியாகவே மாறிவிட்டது. பத்திரிகைகள் நிறைய நகைச்சுவைத் துணுக்குகளை வெளியிடுகின்றன. Unstable justice in Strange cases

இத்தகைய பின்புலம் கொண்ட அமலாக்கத்துறை தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள டாஸ்மாக் நிறுவனத்தையே சோதனை போட த் துவங்கியபோதுதான் தமிழ்நாட்டு அரசு அதற்குத் தடை விதிக்கக் கோரியது. கூட்டாட்சி அமைப்பில் மாநில அரசின் துறை ஒன்றை ஒன்றிய அரசுத் துறை சோதனையிடுவது அத்துமீறலாகாதா என்பதுதான் கேள்வி. மாநில உயர்நீதிமன்றம் இந்த கேள்வியை அங்கீகரிக்காத நிலையில் உச்சநீதிமன்றம் இந்த கேள்வியை ஏற்றுக்கொண்டு அமலாக்கத் துறை சோதனைகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது, இந்த விசாரணையின் பின்புலத்தை விளக்கச் சொல்லிக் கேட்டுள்ளது.
அதேபோல, பல்கலைகழக துணைவேந்தர் நியமனத்தில் வேந்தராக கெளரவப் பதவி வகிக்கும் ஆளுனர், துணைவேந்தரை தேர்வு செய்வதில் மாநில அரசின் உரிமைகளுக்குக் குறுக்கே நிற்பதால், வேந்தரின் தலையீடின்றி துணை வேந்தர்களை முதல்வரே முறையான வழிமுறைகளைப் பின்பற்றி நியமிக்க வகை செய்யும் சட்ட த்தை தமிழ்நாடு அரசு இயற்றியது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுனர் காலம் தாழ்த்தி வந்ததால், ஆளுனருக்கு எதிராக தமிழ்நாட்டு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றமே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு இரண்டு பல்கலைகழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை தமிழ்நாட்டு அரசு அறிவித்தது. Unstable justice in Strange cases
இதற்குத் தடை விதிக்கச் சொல்லி பாஜக வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவசரமாக இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பு வாதங்களை சமர்ப்பிக்க போதுமான அவகாசம் தராமல் அவசரமாக தீர்ப்பளிக்க வேண்டிய தேவை எப்படி எழுகிறது என்பதுதான் விசித்திரம். மேலும் உச்சநீதிமன்றமே அமலாக்கிய சட்ட த்தின் செயல்பாட்டை உயர்நீதிமன்றம் தடை விதிப்பது வினோதமாக உள்ளது. அப்படியே துணைவேந்தர்களை மாநில அரசு நியமித்துவிட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடும் என்பதுதான் கேள்வி. அந்த நியமனம் சரியில்லையென்றால் அதனை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாமே.

பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது: பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் கருத்துரிமை, மனித உரிமைகள்
நவீன குடியரசுத் தத்துவத்தின் அடிப்படையே தனி மனித உரிமைகள்தான். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று மாபெரும் மானுட வாத இலட்சியங்களில் முதலில் வருவது சுதந்திரம்தான். கடந்த முன்னூறு ஆண்டுகளில் தங்கள் கருத்துக்களை பொதுவெளியில் கூற தனிமனிதர்களுக்கு உள்ள சுதந்திரமே சமூகத்தின் ஆணிவேர் என்று எண்ணற்ற சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள் எழுதியுள்ளார்கள். இந்திய அரசமைப்பு சட்டமும் கருத்துரிமையை அடிப்படை உரிமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த கருத்துரிமையின் அடிப்படை என்ன? அரசாங்கத்தின் சட்டங்களுக்கு ஒவ்வொருவரும் கட்டுப்பட வேண்டும். ஆனால் அந்த சட்டங்களை விமர்சனம் செய்யலாம். அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யலாம். ஜெர்மானிய தத்துவவாதி இம்மானுவேல் காண்ட் “எத்தனை வேண்டுமானால் எதிர்வாதம் செய்யுங்கள்; ஆனால் (சட்டத்திற்கு) கீழ்படிந்து நடவுங்கள்!” என்பதையே அறிவொளிக்கால இலட்சியமாகச் சொன்னார்.
இந்தியாவில் பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து அந்த அரசின்மீது விமர்சனம் செய்தாலே அது தேசத்திற்கு எதிரானது என்று கூறுப்படுகிறது. அரசை விமர்சிப்பது எல்லாமே தேசத்துரோகமாக வர்ணிக்கப்படுகிறது. காங்கிரஸ், இந்தியா கூட்டணி கட்சிகளும், தி.மு.க-வும் தேச நலனுக்காக பாடுபடும் கட்சிகள்தானே? இப்போது அந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிந்தூர் நடவடிக்கையினை விளக்க ஒன்றிய அரசின் சார்பில் பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளார்களே? தி.மு.க சார்பில் கனிமொழி அவர்கள் ஒரு குழுவிற்கு தலைமையேற்று சென்றுள்ளாரே? தேசப்பற்று வேறு, அரசாங்கத்தை விமர்சிப்பது வேறு என்பது இதிலிருந்து தெளிவாகிறது அல்லவா? Unstable justice in Strange cases

டில்லிக்கு வெளியே ஹரியானா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற தனியார் பல்கலைகழகம் அசோகா பல்கலைகழகம். இதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறந்த இந்திய, வெளிநாட்டு அறிஞர்கள் பேராசிரியர்களாகப் பணிபுரிகிறார்கள். அந்த பல்கலைகழகத்தில் அரசியலறிவுத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிபவர் அலி கான் மஹ்முதாபாத் என்னும் ஆய்வாளர். உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் நண்பர் ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரனுடன் இணைந்து இவரிடம் ஒரு நேர்காணலைச் செய்து மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம். அலி கான் ஃபேஸ்புக்கில் எழுதிய இரண்டு நிலைத்தகவல்களுக்காகக் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். தேசத்துரோகம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இப்போது உச்ச நீதிமன்றம் பிணை வழங்கினாலும், அவரை இந்த பிரச்சினை குறித்து கருத்துக் கூறக்கூடாது என்று கட்டுப்படுத்தியுள்ளது; பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளது. எதனால் இவ்வளவு தீவிரமான நடவடிக்கை? அப்படி என்ன ஆபத்தான கருத்தை கூறிவிட்டார் அவர்?
காஷ்மீர் பெஹல்காமில் தீவிரவாதிகள் தாக்கியதை அடுத்து, பாகிஸ்தானிலுள்ள ஒன்பது தீவிரவாத மையங்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இந்த நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது. நாட்டிலுள்ள பல்வேறு தரப்பினரும் இந்த ராணுவ நடவடிக்கையை ஆதரித்தனர். இந்திய ராணுவம் தொலைக்காட்சியில் இந்த நடவடிக்கை குறித்த விவரங்களை நாட்டு மக்களுக்கு அறிவித்தது. இந்த நடவடிக்கையை ஒட்டி பாகிஸ்தானும் சில டிரோன் களை இந்தியப் பகுதிக்குள் அனுப்ப சில நாட்கள் போர் பதட்டம் மூண்டது. ஊடகங்கள் மோசமான வதந்திகளைப் பரப்பி மக்களை திகிலில் ஆழ்த்தின; வெறியூட்டின. அதற்குள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்திய அரசு சார்பாக தொலைக்காட்சியில் பேசியதில் இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவர் முஸ்லீம். மற்றொருவர் தலித் வகுப்பினர் என்று கூறப்படுகிறது. அலி கானின் முதல் பதிவு இதனை பாராட்டுகிறது. முதலில் இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை ஆதரித்து எழுதியுள்ளார் அலி கான். பாகிஸ்தானின் தீவிரவாத தூண்டுதலைக் கண்டித்துள்ளார். ராணுவம் சார்பாக தொலைக்காட்சியில் இரு பெண்கள் பங்கேற்றதை வரவேற்ற அவர், இது வெறும் குறியீடாக இருந்துவிடக் கூடாது என்றுதான் கூறினார். இந்தியா உண்மையிலேயே பன்மைத்துவத்தைப் போற்றும் நாடாகத்தான் உருவானது; அது நடைமுறையில் அவ்வாறு தொடரவேண்டும். சிறுபான்மையினர், நலிவுற்றோருக்கு எதிரான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் என்ற வகையில் எழுதினார். Unstable justice in Strange cases
இன்னொரு பதிவில் தேசபக்தி என்ற பெயரில் போர்வெறிக் கூச்சல்கள் ஊடகங்களில் அதிகரிப்பதை விமர்சித்து எழுதினார். அவரைப்போல எத்தனையோ சிந்தனையாளர்கள் போர் வெறிப் பேச்சுக்களைக் கண்டித்து எழுதினார்கள். அரசு பாதுகாப்பு நோக்கத்திற்காக சில அளவான தாக்குதல்களை தொடுக்கிறது. அது வேறு; பாகிஸ்தானை அழிக்க வேண்டும் என்று கூச்சலிடுவது வேறு. அவ்வாறு கூச்சலிடுவதைக் கண்டித்தால் அது தேச விரோதமாகாது. அரசாங்கமே முதலில் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவில்லையே? வெளியுறவு அமைச்சரே என்ன சொல்கிறார்? நாங்கள் தீவிரவாத முகாம்களை மட்டும் தாக்குவதாக பாகிஸ்தானிடம் தெரிவித்துவிட்டோம் என்றுதானே சொல்கிறார்? பிறகு எப்படி பாகிஸ்தான் முர்தாபாத் என்று கோஷமிட முடியும்? அதனை சுட்டிக்காட்டினால் தவறாகுமா?

இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் தொலைக்காட்சியில் பேசியது வெறும் அலங்காரமாக இருந்துவிடக் கூடாது என்று அவர் சொன்னதை பெண்களை அவமதித்து விட்ட தாக ஹரியானா மகளிர் ஆணையம் புகாரளித்தது. அதன் இயக்குனர் ரேணு பாட்டியா அசோகா பல்கலைகழகம் சென்று விசாரணை நடத்தினார். மற்றொரு பாஜக நிர்வாகியும் அலி கான் மீது புகாரளித்தார். அந்த புகார்களின் பேரில் அலி கான் மீது பல்வேறு கடுமையான பிரிவுகளில், செடிஷன் என்னும் தேசத்துரோக குற்றச்சாட்டு உட்பட, பல குற்றச்சாட்டுகளுடன் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து ஹரியானா காவல்துறை கைதும் செய்துவிட்டது. Unstable justice in Strange cases
அவரது ஃபேஸ்புக் பதிவுகள்தான் அவர் செய்த குற்றம். அந்த பதிவுகளைப் படித்த அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அதில் தேச விரோதமாகவோ, பெண் ராணுவ அதிகாரிகளை அவமதிக்கும் விதமாகவோ எதுவுமே இல்லையே என்று பெரும் வியப்படைந்தனர். இந்தியா டுடே தொலைக்காட்சியில் பிரீத்தி செளதிரி என்ற தொகுப்பாளர், ஹரியானா பெண்கள் ஆணையத் தலைவர் ரேணு பாடியாவிடம் நேரலை விவாதத்திலேயே அலி கான் என்ன தவறாக எழுதிவிட்டார் என்று கேட்டார். வரி வரியாக படித்தும் காட்டினார். ஆனால் ரேணு பாடியா வார்த்தைகளை துண்டித்து எடுத்து தவறாகப் பொருள் கற்பிப்பதிலேயே குறியாக இருந்ததை யாரும் பார்த்து அறியலாம். Unstable justice in Strange cases
பல முக்கிய ஆங்கில நாளிதழ்கள், ஹிண்டு உள்ளிட்டவை, அலி கான் கைதைக் கண்டித்து தலையங்கம் எழுதின. பல்கலைகழக ஆசிரிய ர்கள், மாணவர்கள் வன்மையாகக் கண்டித்தனர். அலி கானின் மாணவர்கள் அவர் எத்தகைய பண்பட்ட, கனிவான ஆசிரியர் என்பதை எழுதினர். காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் மஹுவா மொய்த்ரா, சமாஜ்வாடி கட்சி அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இந்த எதேச்சதிகாரக் கைதினை கண்டித்தனர்.
ஆனால் ஹரியானா கீழமை நீதிமன்றம் அவருக்கு பதினைந்து நாட்கள் நீதிமன்றக் காவல் என தீர்ப்பளித்தது. மறுநாளே கபில் சிபல் தலைமையில் அவருக்காக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அலி கான் தேசப்பற்று மிக்கவர் என்று எடுத்துக்கூறி அவருக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரப்பட்டது. உச்ச நீதிமன்ற அமர்வு, நீதியரசர்கள் சூரியகாந்த், என்.கே.சிங் ஆகியோரைக் கொண்ட அமர்வு, அவருக்கு பிணை வழங்கினாலும் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. வினோதமான ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. Unstable justice in Strange cases
அது என்னவென்றால் ஹரியானா டிஜிபி-யை, ஹரியானாவையோ, டில்லியையோ சேராத மூன்று மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கச் சொல்லியுள்ளது. அதில் ஒருவர் பெண் அதிகாரியாக இருக்க வேண்டும். அந்த குழு அலி கானின் சமூக ஊடக பதிவுகளை ஆராய்ந்து அவர் எழுதிய வாக்கியங்களின் உண்மையான பொருள் என்ன என்று காணவேண்டும் என்றுள்ளது. வழக்கறிஞரும், நீதியியல் அறிஞருமான கெளதம் பாடியா காவல்துறை அதிகாரிகள் மொழி ஆராய்ச்சியில் ஈடுபடப் போகிறார்களா என்று நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்துரிமையைக் காக்க வேண்டிய நீதிபதிகள் போர்காலத்தில் இப்படி அரசியல் பேசுவது தேவையா என்று கேட்டுள்ளார்கள். அலி கான் எழுதியது குறிப்பிட்ட மக்கள் தொகுதியைத் தூண்டிவிடும் சங்கேத அழைப்பு, Dog Whistle, என்று கூறியுள்ளார்கள். இத்தகைய வர்ணணைகள் கருத்து சுதந்திரத்தில் அக்கறையுள்ள அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளன. ஒரு பேராசிரியர் தனது முகநூல் பக்கத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நாட்டில் நடக்கும் வன்முறைச் செயல்கள் கூடாது என்று மென்மையாகச் சுட்டிக்காட்டினால் அது தேசத்துரோகம் என்று கூறமுடியுமா என்று கேட்கிறார்கள். பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இந்த பிரச்சினையின் ஆழத்தை சுட்டிக்காட்டி எழுதியுள்ளார். Unstable justice in Strange cases
தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது. ஹரியானா டிஜிபிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனித உரிமையும், கருத்துரிமையும் காக்கப்படுவது மக்களாட்சியின் உயிர்மூச்சினை பாதுகாப்பது என்பதை அனைவரும் உணர வேண்டும். Unstable justice in Strange cases
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com