ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக அமெரிக்கா அறிவித்த சிறிது நேரத்திலேயே இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்தியது ஈரான். U.S. Strike Iran’s attack Israel
ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஆனால் ஈரானோ, அமெரிக்காவின் தாக்குதலால் பொதுமக்களுக்குதான் பாதிப்பு ஏற்பட்டதே தவிர, அணுசக்தி நிலையங்களுக்கு சேதம் ஏற்படவில்லை என அறிவித்தது.
மேலும், ஈரான் அமைதிப் பாதைக்கு திரும்பாவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும்; ஈரான் மீது தொடர் தாக்குதல் நடத்துவோம் எனவும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம் உள்ளிட்ட இடங்கள் மீது ஈரான் இன்று ஜூன் 22-ந் தேதி ஏவுகணைகள் மற்றும் கொத்து குண்டுகளை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தியது. ஈரானின் புரட்சி காவல் படையானது நீண்ட தூரம் பாயக் கூடிய ஏவுகணைகளை வீசி இந்த தாக்குதல் நடத்தியதாக ஈரான் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.