தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. tamilnadu weather report
சென்னையில் நேற்று இரவு 10 மணியளவில், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. கோவை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லார் பகுதியில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் சோழிங்கநல்லூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
குறைந்தபட்சமாக பெரம்பலூர், சென்னை பெருங்குடி பகுதியில் தலா 1 செமீ மழை பொழிந்துள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரை, அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் : 40.6° செல்சியல் வெயிலும், குறைந்தபட்சமாக தஞ்சை அதிராம்பட்டினத்தில் 19.6° செல்சியை வெயிலும் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன் 23) வெளியிட்ட அறிவிப்பில்,
“மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (ஜூன் 23) முதல் ஜூன் 29ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. tamilnadu weather report