தமிழும் அதன் உதிரத்து உதித்தெழுந்த திராவிட மொழிகளும்!

Published On:

| By Minnambalam Desk

Tamil and its spin-off Dravidian languages

ரவிக்குமார் Tamil and its spin-off Dravidian languages

தலைவர் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாள் இந்த ஆண்டு செம்மொழி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. Tamil and its spin-off Dravidian languages

“தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான ஜூன் 3 தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழிநாள் விழாவாகக் கொண்டாடப்படும்” எனக் கடந்த 2024 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்த ஆண்டு முதன்முறையாகச் செம்மொழி நாள் கொண்டாடப்படுகிறது.

Tamil and its spin-off Dravidian languages

கலைஞர் பிறந்த நாளை ஆண்டுதோறும் ‘ செம்மொழி நாளாகக்’ கடைபிடிப்பதென்று விழுப்புரத்தில் (15.09.2018) நடைபெற்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த அறிவிப்புதான் இப்போது அரசாணையாக நடைமுறைக்கு வந்துள்ளது.

கலைஞரின் பிறந்த நாளைச் செம்மொழி நாள் எனக் கடைப்பிடிப்பது பொருத்தமானதுதான். முதலமைச்சராக, கட்சியின் தலைவராக, படைப்பாளியாக அவர் தனது வாழ்நாளில் தமிழ் மொழிக்காக ஆற்றிய பணிகள் கணக்கிலடங்கா. செம்மொழி என்ற நடுவண் அரசின் அங்கீகாரத்தைத் தமிழுக்குப் பெற்றுத் தந்ததையும், அதை உலகுக்கு எடுத்துரைக்கச் ‘செம்மொழி மாநாடு’ எடுத்ததையும் அவர் முதலமைச்சராக இருந்து தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளில் சிகரங்கள் எனக் குறிப்பிடலாம். Tamil and its spin-off Dravidian languages

செம்மொழியானத் தமிழ்மொழி

2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாள் தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கும் ஆணையை இந்திய ஒன்றிய அரசு பிறப்பித்தது (அரசாணை எண்: IV-14014/7/2004-NI-II dated 12.10.2004 அ) என்றபோதிலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை ( CICT) உருவாக்குவதற்கான பாராளுமன்ற ஒப்புதலுடன் கூடிய ஒன்றிய அரசின் இறுதி அறிவிப்பு 2008 ஜனவரி 30ஆம் நாள்தான் வெளியிடப்பட்டது.

Tamil and its spin-off Dravidian languages

கலைஞரின் இடைவிடாத முயற்சியால் அதுவரை மைசூரில் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இயங்கி வந்த செம்மொழித் தமிழ்த் திட்டம் 2008 மே மாதம் 19ஆம் நாள் சென்னைக்கு மாற்றப்பட்டது. தமிழக முதலமைச்சர் என்ற முறையில் அதன் தலைவராக இருந்து உடனடியாகப் பணிகளை கலைஞர் மேற்கொண்டார்.

மூன்று ஆண்டுகளுக்கு உரிய செம்மொழித் தமிழ் விருதுகளுக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பட்டியல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஐம்பெருங்குழு , எண்பேராயம் என இரு குழுக்கள் உருவாக்கப்பட்டன. அத்துடன் நில்லாமல் தமிழுக்குச் செம்மொழி என்னும் சிறப்பு அங்கீகரிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக உலகத் தமிழ் மாநாட்டை நடத்தவும் கலைஞர் முடிவெடுத்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

26.09.2009 அன்று காஞ்சிபுரத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது என்ற அறிவிப்பை வெளியிட்டார். Tamil and its spin-off Dravidian languages

உலகத் தமிழ் மாநாடுகளை நடத்துவதற்கென்று உருவாக்கப்பட்ட ஐ.ஏ.டி.ஆர். அமைப்பின் தலைவராக இருந்த நொபோரு கராஷிமா, திமுக அரசு நடத்துவதாக அறிவித்த உலகத் தமிழ் மாநாட்டுக்கு ஏனோ ஒத்துழைப்புத் தர மறுத்துவிட்டார். அப்போதும் கலைஞர் மனம் தளரவில்லை. அதுவும் நன்மைக்கே எனக் கருதி ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு‘ என்று அதற்குப் பெயரைச் சூட்டினார். Tamil and its spin-off Dravidian languages

16.10.2009 அன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கலைஞர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின் இறுதியில் ’2010 ஜூன் 24 முதல் 27 வரை நான்கு நாட்களுக்குக் கோவையில் ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதென்ற’ தீர்மானத்தை முனைவர் பொற்கோ முன்மொழிய முனைவர் சிலம்பொலி செல்லப்பன் வழிமொழிந்தார். அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Tamil and its spin-off Dravidian languages

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழரெல்லாம் கூடித் தமது மொழியின், இனத்தின் பெருமையைக் கொண்டாடுவதற்கு வழிவகுத்தது மட்டுமின்றித் தமிழின் தொன்மைக்கும் தனித்துவத்துக்கும் எதிராக ஷெல்டன் பொல்லாக், ஹெர்மன் டீக்கன் முதலான சமஸ்கிருதப் பற்றாளர்கள் முன்வைத்த பழியைத் துடைப்பதாகவும் அமைந்தது.

சங்க இலக்கியங்களும் சமஸ்கிருதமும்

‘‘சங்க இலக்கியங்கள் – அண்மைக்கால ஆய்வுகள்’’ என்ற தலைப்பில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மாநாட்டின் மையக் கருத்தரங்கம், சங்க இலக்கியத்தின் காலம் குறித்து சமஸ்கிருதப் பற்றாளர்கள் எழுப்பிய சர்ச்சைகளுக்குத் தக்க பதிலை அளித்தது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கலைஞர் தனது சொந்தப் பணம் ஒரு கோடி ரூபாயை அளித்து நிறுவிய அவரது பெயரிலான விருதினை முதன்முதலாகப் பெற்ற அறிஞர் அஸ்கோ பர்போலா ‘சிந்து சமவெளியில் கிடைத்துள்ள எழுத்துகள் திராவிட எழுத்துகளே’ என்ற தனது ஆய்வின் முடிவுகளைத் தனது சிறப்புரையில் எடுத்துக்கூறினார்.

Tamil and its spin-off Dravidian languages

கி.மு. 11ஆம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வடமேற்கு இந்தியாவில் இயற்றப்பட்ட இந்தோ ஆரிய பாடல்களில் திராவிட எழுத்துகள் கலந்திருப்பதை பர்போலா ஆதாரங்களோடு எடுத்துக்காட்டினார். அதற்கான ஆறு உதாரணங்களையும் அவர் தனது உரையில் முன்வைத்தார்.

முகம், களம், பழம், குண்டம், காணா மற்றும் நீர்த் தாவரமான கியாம்பு ஆகிய சொற்கள் ரிக் வேதத்தில் கலந்திருப்பதையும் இவையெல்லாம் தமிழிலிருந்து சமஸ்கிருதத்துக்குக் கடன் வாங்கப்பட்டவை என்பதையும் பர்போலா எடுத்துக் கூறினார். அதுமட்டுமின்றி சிந்து சமவெளி எழுத்துகளில் முருகக் கடவுளைப் பற்றிய குறிப்புகள் இருப்பது குறித்தும் பர்போலாவின் ஆய்வுரை விரிவாகப் பேசியது.‘

Tamil and its spin-off Dravidian languages

‘ வீரத்துக்கும் காதலுக்கும் பெயர்போன இளமையான தெய்வம் ஒன்றைத் தொல் தமிழர்கள் வணங்கியுள்ளனர். அது பலவிதங்களிலும் வட இந்தியாவில் வணங்கப்பட்ட போர்க் கடவுளான ஸ்கந்தா என்பதுடன் ஒப்புமை கொண்டிருக்கிறது. அந்தக் கடவுளுக்குப் பல்வேறு திராவிடப் பெயர்கள் இருந்தாலும் முருகு அல்லது முருகன் என்பதே முதன்மையாக வழங்கிவந்துள்ளது. முருகன் என்றால் இளமை அல்லது இளைஞன் என்று பொருள். ஸ்கந்தாவின் முன்னோராகக் கருதப்படும் ருத்ரா குழந்தையாக உருவகிக்கப்பட்டு சமஸ்கிருதத்தில் இளைஞன் என பொருள்படும்‘ குமார’ என்று அழைக்கப்பட்டார்.

அது முருகன் என்ற சொல்லின் இன்னொரு வடிவமாகவே உள்ளது’’ என்று குறிப்பிட்ட பர்போலா முருகனும் ருத்ர ஸ்கந்தனும் ஒரே தொல் திராவிட தெய்வத்திலிருந்துதான் வந்திருக்கவேண்டும் என்றார். Tamil and its spin-off Dravidian languages

Tamil and its spin-off Dravidian languages

ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட சின்னங்கள் பலவற்றில் ஒரு மரத்தின் முன் மனிதர்கள் மண்டியிட்டுத் தொழுவது போன்று பொறிக்கப்பட்டுள்ளது. புத்த ஜாதகக் கதைகளில் இவ்வாறு மரங்களை வணங்குவது பற்றிப் பேசப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பண்பாடுகளிலும் மக்கள் அரச மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை வணங்கி வருகின்றனர். அது இன்றளவும் நடைமுறையில் உள்ள வழக்கமாகும். குறிப்பாகக் குழந்தைப்பேறு கேட்டு மரத்தைத் தொழுவது இப்போதும் உள்ள வழக்கம். இது முருகக் கடவுளை வணங்குவதோடு எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை விளக்கிய பர்போலா, சிந்து சமவெளியில் கிடைத்த சின்னங்களில் காணப்படும் அணிலின் உருவம் எப்படி முருக வழிபாட்டோடு தொடர்பு கொண்டிருக்கிறது என்பதையும் தனது உரையில் விளக்கினார்.

சமஸ்கிருதத்துக்கு இல்லாத பண்பு

Tamil and its spin-off Dravidian languages

ஆய்வரங்குக்குத் தலைமை வகித்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் ஜார்ஜ் ஹார்ட் , “ தென்னாசியாவில் கிடைத்துள்ள தொன்மையான இலக்கியங்களில் ஒன்றாக ரிக் வேதத்தைச் சொல்லலாம். வேத கால மக்கள் இயற்கைச் சக்திகளைக் கடவுளர்களின் வெளிப்பாடாகப் பார்த்தார்கள். சடங்குகள் மூலமாக இயற்கைச் சக்திகளை அவர்கள் கட்டுப்படுத்த முனைந்தார்கள். அவ்வாறு கட்டுப்படுத்துவதற்கு இலக்கியத்தை ஒரு கருவியாகக் கையாண்டார்கள்” என்றார். Tamil and its spin-off Dravidian languages

பல்வேறு சமஸ்கிருதப் பாடல்களை வாசித்துக் காட்டி அவற்றை இயற்றிய கவிஞர்கள் வாசகர்களை எப்படி ஒரு கற்பனையான வினோதமான உலகத்துக்குள் கொண்டு செல்கிறார்கள் என்பதை விளக்கிய ஜார்ஜ் ஹார்ட், சமஸ்கிருத காவியப் படைப்புகள் எல்லாமே புராணத் தன்மை கொண்டவையாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

மக்களைப் பற்றிப் பேசுவதாக அமைந்த சமஸ்கிருத இலக்கியங்களும்கூட கற்பனையானவையாக இருப்பதைக் குறிப்பிட்ட அவர், “ சங்க இலக்கியங்கள் சமஸ்கிருத மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருப்பதையும், அவற்றில் குறிப்பிடப்படும் தாவரங்கள், விலங்குகள் யாவும் உண்மையானவையாக இருப்பதையும் எடுத்துக்காட்டி அதுதான் தமிழுக்கு உள்ள தனித்தன்மையென்று குறிப்பிட்டார்.

சங்கப் பாடல்கள் கிராமங்களில் உள்ள யதார்த்தத்தை மட்டும் சித்தரிப்பவையாக இல்லை. அவை மனிதர்களின் உளவியல் யதார்த்தத்தையும் எடுத்துக்கூறுகின்றன என்று கூறிய ஜார்ஜ் ஹார்ட், ‘‘அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்’’ என்று தொடங்கும் பாரி மகளிரின் பாடலை வாசித்துக் காட்டி அந்த சிறிய பாடல் எவ்வாறு சங்க காலக் கவிஞர்கள் யதார்த்த நிகழ்வுகளை மட்டுமின்றி யதார்த்த மனநிலையையும் தமது கவிதைகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர் என்பதை விவரித்தார்.

Tamil and its spin-off Dravidian languages

“தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை எடுத்துக்கொண்டால் அவற்றில் சுமார் எண்பது விழுக்காடு வரை சமஸ்கிருத வார்த்தைகள் கடன் வாங்கப்பட்டு, அப்படியே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பண்டைய காலந்தொட்டே தமிழ் மொழியானது சமஸ்கிருதத்தைத் தவிர்த்து வந்திருக்கிறது. அதன் காரணமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும்கூட எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாக தமிழின் தொன்மையான இலக்கியங்கள் விளங்குகின்றன. தமிழின் தனித்துவம் என்பது யதார்த்தமான விஷயங்களைப் பேசுவதுதான். சமஸ்கிருதத்தில் அந்தப் பண்பு கிடையாது” என்று வாதிட்ட ஜார்ஜ் ஹார்ட் சமஸ்கிருதத்தைப் பார்த்து சங்க இலக்கியம் எழுதப்பட்டது என்பதைத் திட்டவட்டமாக மறுத்தார். Tamil and its spin-off Dravidian languages

அந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய வரலாற்றறிஞர் சம்பகலட்சுமி, தமிழறிஞர்கள் சோ.ந.கந்தசாமி, அ.அ.மணவாளன், எ.சுப்பராயலு, துப்யான்ஸ்கி உள்ளிட்ட அறிஞர்களும் தமிழ் மொழியின் தொன்மையைப் பல்வேறு சான்றுகளோடு நிறுவினர். அந்த மாநாட்டின்மூலம் தமிழ்ப் பகைவர்களுக்குச் சரியான பாடத்தைத் கலைஞர் புகட்டினார்.

செம்மொழி நாள் அறிவிப்பு

2011ல் ஆட்சி மாற்றம் நடைபெற்றவுடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பணிகள் முடக்கப்பட்டன. ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்ற இரு குழுக்களும் கலைக்கப்பட்டன. ஒன்றிய ஆட்சியைப் பிடித்த பாஜகவோ, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அழித்தொழிப்பதிலேயே முனைப்பாக இருந்தது.

அதன் தன்னாட்சித் தகுதியை அழித்து திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக அதை மாற்றுவதற்கு பாஜக அரசு செய்த சதி தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இந்நிலையில்தான் கலைஞரின் பிறந்த நாளை ‘ செம்மொழி நாளாகக் கடைப்பிடிப்போம்’ என்ற அறிவிப்பு விழுப்புரத்தில் வெளியானது. அது இப்போது தமிழ்நாடு அரசின் ஆணையாக நடைமுறைக்கு வந்துள்ளது.

Tamil and its spin-off Dravidian languages

“செம்மொழியின் சிறப்பையும் முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டு தோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை பேச்சுப் போட்டிகள் நடத்திச் செம்மொழி நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப் பெறுவர்” என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டன. Tamil and its spin-off Dravidian languages

திராவிட மொழிகளின் ஒற்றுமையைக் காப்போம்

செம்மொழியின் சிறப்பை இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதற்கு இந்த நடவடிக்கை பயன்படும். இத்துடன் நின்று விடாமல் செம்மொழி தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்கும் நாளாகவும் இந்த நாளை தமிழ்நாடு அரசு ஆக்க வேண்டும். தமிழின் தொன்மையை நிறுவுவதற்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் கலைஞர் பயன்படுத்தியது போல செம்மொழி நாளை தமிழ்நாடு அரசு பயன்படுத்த வேண்டும் இப்போதும் கூடத் தமிழின் தொன்மையை அனைவரும் ஏற்றுக் கொள்ளச் செய்வது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. உலக அளவில் செயல்பட்டு வரும் தமிழறிஞர்களை இந்நாளில் அழைத்து ஆய்வரங்கு ஒன்றை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்.

சமஸ்கிருதப் பற்றாளர்களால் தமிழுக்குத் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் தடைகள் மட்டுமின்றித் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த நமது அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களாலும் இப்போது புதிய நெருக்கடிகள் உருவாக்கப்படுகின்றன.

கன்னட மொழிக்கும் தமிழ் மொழிக்குமான உறவைப்பற்றி கமல்ஹாசன் கூறிய கருத்தை முன்வைத்து கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களால் எழுப்பப்பட்டுள்ள சர்ச்சை இதன் அண்மைக்காலச் சான்றாகும். சமஸ்கிருத மேலாதிக்கத்தை எதிர்க்கும் போராட்டத்தில் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து நிற்கவேண்டிய தேவை உள்ளது. அந்த ஒற்றுமையை அரசியல் தளத்தில் கட்டியெழுப்புவதற்குத் திராவிட மொழிகளுக்கிடையிலான உறவை மொழியியல் அடிப்படையில் வலுவாக எடுத்துச் சொல்வது இன்றியமையாததாகும். Tamil and its spin-off Dravidian languages

Tamil and its spin-off Dravidian languages

மனோன்மணியம் சுந்தரனாரின் பாடல் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிவிக்கப்பட்டபோது அதிலிருந்த “கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதித்தெழுந்தே” என்ற வரி நீக்கப்பட்டது. அதற்கான காரணத்தை கலைஞரே ஒரு கூட்டத்தில் விளக்கியிருக்கிறார்: “ கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் துளுவும் (தமிழிலிருந்து உருவானவை ) என்பதெல்லாம் மொழி ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாக இருக்கலாம். Tamil and its spin-off Dravidian languages

கன்னடக்காரர்களால் ஒத்துக்கொள்ள முடியுமா? தெலுங்குக்காரர்கள் ஒத்துக்கொள்வார்களா? நாம் இங்கே தமிழை வாழ்த்தப் போய் தமிழர்களுக்கும் கர்நாடக மக்களுக்கும் இடையே கசப்பும் பூசலும் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த வரி விடப்பட்டது( முரசொலி 11.9.2005 ) என அவர் கூறியிருக்கிறார்.

ஒரு மொழியியல் உண்மையை வலியுறுத்துவது அரசியல் முரண்பாட்டுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வே கலைஞரின் பேச்சில் வெளிப்பட்டுள்ளது. அது ஏற்கத் தக்கதுதான் என்றாலும் மொழியியல் உண்மையை மேலும் ஆதாரபூர்வமாக ஆய்வுத் தளத்தில் நிறுவும் கடமையை அரசியலுக்காக நாம் புறக்கணிக்கக்கூடாது. Tamil and its spin-off Dravidian languages

கட்டுரையாளர் குறிப்பு: Tamil and its spin-off Dravidian languages

Tamil and its spin-off Dravidian languages by Ravikumar MP

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்  (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share