ADVERTISEMENT

அப்பல்லோ மருத்துவமனையில் வேலை… கூடவே மாதம் ரூ.5,000 ஸ்டைபன்ட்! நர்சிங் படித்தவர்களுக்குத் தாட்கோ (TAHDCO) கொடுக்கும் சூப்பர் வாய்ப்பு!

Published On:

| By Santhosh Raj Saravanan

tahdco apollo nursing training with stipend 2025 apply online

“நர்சிங் முடிச்சுட்டு வேலை தேடிக்கிட்டு இருக்கீங்களா? பெரிய கார்ப்பரேட் ஆஸ்பத்திரியில வேலை பார்க்கணும்னு ஆசையா? ஆனா முன் அனுபவம் (Experience) இல்லைனு நிராகரிக்கிறாங்களா?”

கவலைப்படாதீங்க! படித்து முடித்த கையோடு, கைநிறைய சம்பளத்தில் வேலையும், படிக்கும்போதே உதவித்தொகையும் (Stipend) கிடைக்கும் ஒரு அருமையான வாய்ப்பை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. குறிப்பாகச் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர்களுக்கு இது ஒரு ‘கோல்டன் சான்ஸ்’!

ADVERTISEMENT

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO), அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து இந்தச் சிறப்புப் பயிற்சித் திட்டத்தை அறிவித்துள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ADVERTISEMENT

இந்தத் திட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

  • இனம்: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
  • கல்வித் தகுதி: பி.எஸ்சி நர்சிங் (B.Sc Nursing) அல்லது டிப்ளமோ நர்சிங் (DGNM) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • தேர்ச்சி ஆண்டு: 2022, 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
  • கல்லூரி மாணவர்கள்: தற்போது கல்லூரியில் இறுதியாண்டு (Final Year) படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.
  • வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

என்ன பயிற்சி? என்ன பலன்?

ADVERTISEMENT

இது வெறும் ஏட்டுச் சுரைக்காய் படிப்பு இல்லை, நேரடி வேலைவாய்ப்புக்கான பயிற்சி!

  • பயிற்சி விவரம்: ‘இணையவழி மருத்துவமனை நிர்வாக செவிலியர் பயிற்சி’ (Online Hospital Administration Nursing Training) அளிக்கப்படும். ஒரு மருத்துவமனையை எப்படி நிர்வகிப்பது, நோயாளிகளை எப்படிக் கையாள்வது போன்ற நுணுக்கங்கள் இதில் கற்றுத் தரப்படும்.
  • பயிற்சி இடம்: உலகத்தரம் வாய்ந்த அப்பல்லோ மருத்துவமனை (Apollo Hospitals) நிபுணர்களைக் கொண்டு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
  • உதவித்தொகை (Stipend): பயிற்சி பெறும் காலத்தில் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். படித்துக்கொண்டே சம்பாதிக்கலாம்!
  • வேலை உறுதி: பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அப்பல்லோ மருத்துவமனைகள் மற்றும் பிற முன்னணி தனியார் மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு (Placement) ஏற்படுத்தித் தரப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமுள்ளவர்கள் தாட்கோ (TAHDCO) இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  • இணையதளம்: www.tahdco.com என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
  • தேவையான ஆவணங்கள்: சாதிச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம்.

சாதாரண கிளினிக்ல வேலை பார்த்தா கம்மியான சம்பளம்தான் கிடைக்கும். ஆனா, ‘ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்’ (Hospital Administration) கோர்ஸ் முடிச்சா, கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகள்ல டீசன்ட் சம்பளம், ஏசி ரூம்ல வேலைனு லைஃப் ஸ்டைலே மாறிடும். அதுவும் அப்பல்லோ போன்ற பெரிய பிராண்ட்ல டிரெய்னிங் எடுத்தா, அந்த சர்டிபிகேட்டுக்கு உலகம் முழுக்க மரியாதை இருக்கு.

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் ஸ்டூடன்ட்ஸ், தயவுசெஞ்சு இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. ஃபைனல் இயர் படிக்கிற பசங்க இப்பவே அப்ளை பண்ணிட்டீங்கன்னா, காலேஜ் முடிச்ச கையோடு வேலையில சேர்ந்துடலாம். உங்க ஃபிரண்ட்ஸுக்கும் இந்தத் தகவலை ஷேர் பண்ணுங்க, ஒருத்தருக்கு வேலை கிடைச்சா கூட சந்தோஷம்தானே!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share