ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் நானா? – எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

Published On:

| By Selvam

sp velumani denied that i am not participate

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (ஜூன் 23) விளக்கமளித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா மற்றும் 24-வது பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் நூற்றாண்டு விழாவை ஒட்டி பேரூர் ஆதீன மடத்தில் பாரம்பரிய சிவ வேள்வி பூஜை இன்று (ஜூன் 23) நடைபெற்றது. sp velumani denied that i am not participate

இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத்துக்கு எஸ்.பி வேலுமணி வெள்ளி வேலை பரிசாக வழங்கினார்.

இந்தநிலையில், ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் எஸ்.பி வேலுமணி பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி,

“பேரூர் ஆதினத்தின் மகா சன்னிதானம் சாந்தலிங்க அடிகளாரின் நூற்றாண்டு நிகழ்ச்சிக்கு எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வில் நான் பங்கேற்று ஜீவ சமாதியில் ஆசிர்வாதம் வாங்குவேன். ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்கு எண்ணிக்கை நாள் அன்றும் அவரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்குவேன். அவர் கோவை மாவட்டத்தின் பெருமை.

இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தையும் அவர்கள் அழைத்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கு நாங்கள் போக மாட்டோம். அவர்களும் எங்களை அழைக்க மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ் என்பது தனி அமைப்பு. இந்த நிகழ்ச்சியில் நான் மட்டுமல்ல, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை.

மக்கள் மத்தியில் திமுகவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருவதால், அதை மடைமாற்றி இந்த விஷயத்தை பூதாகரமாக்குகிறார்கள்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share