ADVERTISEMENT

குழந்தைகளுக்கு இந்த பாலிசி எடுத்தாச்சா? காலேஜ் படிக்கும் போது பணப் பிரச்சினையே வராது!

Published On:

| By Santhosh Raj Saravanan

secure your children future by investing this lic policy no problem for college fees

குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) ஜீவன் தருண் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் தினசரி 150 ரூபாயை சேமிப்பதன் மூலம், 25 ஆண்டுகளில் ரூ.26 லட்சம் வரை வருமானத்தை அளிக்கும். இது பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாத, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பிரீமியம் செலுத்தும் திட்டமாகும். குழந்தைகளின் கல்விச் செலவுகள், கல்லூரி கட்டணம் அல்லது எதிர்காலத் தொழில் தொடங்குவதற்கு இந்தத் திட்டம் நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.

இந்த ஜீவன் தருண் திட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்கலாம். தினசரி ரூ.150 சேமித்தால், மாதத்திற்கு ரூ.4,500 மற்றும் ஆண்டுக்கு ரூ.54,000 சேமிக்க முடியும். உங்கள் குழந்தை 1 வயதில் இந்தத் திட்டத்தில் சேர்ந்து, 25 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பிரீமியம் செலுத்தினால் பாலிசி முதிர்ச்சியடையும் போது அசல் தொகை, ஆண்டு போனஸ் மற்றும் இறுதி கூடுதல் போனஸ் சேர்த்து ரூ.26 லட்சம் வரை பெறலாம். இது குழந்தைகளின் கனவுகளை நனவாக்கவும், பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யவும் உதவும்.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு சில முக்கிய நிபந்தனைகள் உள்ளன. குழந்தையின் குறைந்தபட்ச வயது 90 நாட்கள் மற்றும் அதிகபட்ச வயது 12 ஆண்டுகளாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தை 12 வயதுக்கு மேல் இருந்தால், இந்தத் திட்டத்தில் சேர முடியாது. பாலிசி காலம் குழந்தையின் தற்போதைய வயதிலிருந்து 25 வருடங்கள் கழித்து கணக்கிடப்படும். அதாவது, குழந்தையின் வயதை 25ல் இருந்து கழித்தால், பிரீமியம் செலுத்தும் காலம் கிடைக்கும்.

இந்த பாலிசியின் முக்கிய அம்சம் அதன் “பணத்தைத் திரும்பப் பெறும்” (money-back) வசதி ஆகும். பொதுவாக, பாலிசிகள் முதிர்ச்சியடையும் போது மட்டுமே பணத்தைத் திரும்பத் தரும். ஆனால், ஜீவன் தருண் திட்டத்தில் குழந்தை 20 வயது முதல் 24 வயது வரை ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகை திரும்பக் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில்தான் குழந்தைகள் கல்லூரிக்குச் செல்வார்கள். அவர்களுக்குக் கல்விக் கட்டணம் போன்ற செலவுகள் அதிகமாக இருக்கும். இறுதியாக, 25வது ஆண்டில் மீதமுள்ள முழுத் தொகையும் போனஸ்களுடன் சேர்த்து வழங்கப்படும்.

ADVERTISEMENT

இந்தத் திட்டம் வருமானத்தைப் பாதுகாப்பதுடன் வரிச் சலுகைகளையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் செலுத்தும் பிரீமியங்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு கிடைக்கும். மேலும், பாலிசி முதிர்ச்சியடையும் போது கிடைக்கும் தொகை அல்லது துரதிர்ஷ்டவசமாக பாலிசிதாரர் இறந்துவிட்டால் கிடைக்கும் மரணப் பலன், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10(10D)-ன் கீழ் முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படும். தேவைப்பட்டால், இந்த பாலிசியின் மீது கடன் பெறும் வசதியும் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share