திமுக கூட்டணியில் ஓட்டையா? – வைகைச் செல்வனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!

Published On:

| By Selvam

RS Bharathi says there is no confusion

கடந்த ஜூன் 14-ஆம் தேதி திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவனை அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. RS Bharathi says there is no confusion

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்த திருமாவளவன், “நாங்கள் இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தோம். அதனால் அவரை சந்தித்தேன். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை. அவரது இலக்கிய பணிகள் குறித்து தான் பேசினார்” என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், காஞ்சிபுரத்தில் இன்று (ஜூன் 18) செய்தியாளர்களை சந்தித்த வைகைச் செல்வனிடம் திருமா உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வைகைச் செல்வன், “ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது. அதிமுக கூட்டணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும். எங்களது கூட்டணியில் பலரும் இணைவார்கள்” என்று தெரிவித்தார்.

வைகைச் செல்வனின் விமர்சனத்திற்கு பதிலளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “திமுக கூட்டணி என்பது கொள்கை கூட்டணி, 2026-ல் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்று திருமாவளவன் தெளிவாக சொல்லிவிட்டார்.

அதனால் யாருடைய விமர்சனங்களையும் நாங்கள் பொருட்படுத்த மாட்டோம். வைகைச் செல்வன் பார்வையில் தான் ஓட்டை விழுந்திருக்கிறது. அவர் ஒரு நல்ல மருத்துவரை சந்தித்து கண்ணை பரிசோதிப்பது நல்லது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share