தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு செவ்வாய்கிழமையும் (அக்டோபர் 21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோர் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவர்.
அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்கிழமை 21.10.2025 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.