என்னுடைய சீக்ரெட் ஆஃப் எனர்ஜி இதுதான்: மனம் திறந்த மோடி

Published On:

| By Selvam

18-வது மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி துவங்கியது. இரண்டு கட்ட தேர்தல் முடிந்துள்ளது. மே 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இயங்கி வரும் பிரதமர் மோடி, சிஎன்என் நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும், இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசியுள்ளார்.

ADVERTISEMENT

அந்தவகையில்,  “நாங்கள் உங்களைத் தொடர்ந்து பார்க்கிறோம், உங்கள் அட்டவணையைப் பெறுகிறோம்; நீங்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு ஐந்து முதல் ஆறு பேரணிகளை நடத்துகிறீர்கள். இவை அனைத்திலும், நீங்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்? முன்னோக்கிச் செல்வதற்கான வலுவான உறுதியை உங்களுக்கு வழங்கும் அந்த சக்தி எது?” என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மோடி,  “நான் முதலில் சொன்னது போலவே, நானாக எதுவும் செய்யவில்லை. கடவுள் இதை முடிவு செய்துவிட்டார், இந்த வேலையைச் செய்ய கடவுள் என்னை அனுப்பியிருக்கலாம்.

ADVERTISEMENT

நான் ஒரு குடும்பத்தில் பிறந்தேன், என் அம்மா படிக்காதவர், பள்ளிக்கூடம் போனதில்லை. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை. எனவே, இது கடவுளின் விருப்பம் இல்லை என்றால், வேறு என்ன? என்னைப் பொறுத்தவரை இரண்டு கடவுள்கள் உள்ளனர் – ஒன்று நம்மால் பார்க்க முடியாதது, மற்றொன்று பொதுமக்கள்.

நான் பொதுமக்களை கடவுளின் வடிவமாக கருதுகிறேன். மேலும், பொதுமக்கள் என்னை ஆசீர்வதித்த நிலையில் இந்த பணிக்காக என்னை அனுப்பிய எல்லாம் வல்ல இறைவன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என்னால் எப்படி இவ்வளவு வேலை செய்ய முடிகிறது என்ற கேள்விக்கு, எனக்காக நான் வாழவில்லை. எனக்கு நேரம் கிடைத்தாலும், ஒவ்வொரு நொடியும் என் நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பதை நான் எப்போதும் மனதில் வைத்திருப்பேன்.

ADVERTISEMENT

பொதுமக்களை அணுகவும், அவர்களைப் பார்க்கவும், அவர்களுடன் பேசவும் இது ஒரு வாய்ப்பு என்று நினைக்கிறேன். மேலும், வீட்டில் ஒரு முக்கியமான பூஜை செய்யும்போது, நாம் எப்படி நடக்கிறோமே, அவ்வாறே இதையும் கருதுகிறேன். நான் 140 கோடி கடவுள்களை வணங்கி வருவதால் இது எனக்கு பிரார்த்தனைக்கான நேரம். இந்த உணர்வுடன் நான் நகர்கிறேன், இது என்னைத் தொடர வைக்கிறது. கடவுளை தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்புவதால் எனக்கு சோர்வே இல்லை” என்று மோடி தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நான் இன்னொரு புதினா? – சரத்பவாருக்கு மோடி பதில்!

புத்தகங்களை பரிசளிக்க ஆசிரியர்கள் கை ஓங்குவது எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share