முதல்முறையாக நடந்துள்ளது : பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து மோடி பேச்சு!

Published On:

| By christopher

modi hope on parliament budget 2025

மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பாஜக அரசின் இந்த முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். modi hope on parliament budget 2025

ஆண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் இன்று (ஜனவரி 31) தொடங்குகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் அதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

முதல் முழுமையான பட்ஜெட்! modi hope on parliament budget 2025

அவர், “பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, செல்வம் மற்றும் செழிப்புக்கான தெய்வமான மகா லட்சுமியை நான் வணங்குகிறேன். நமது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை அவர் தொடர்ந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

ADVERTISEMENT

இந்தியா ஒரு ஜனநாயக நாடாக 75 ஆண்டுகளை நிறைவு செய்தது மிகவும் பெருமைக்குரிய விஷயம். இந்தியா உலகளாவிய பீடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

இது எனது மூன்றாவது பதவிக் காலத்தின் முதல் முழுமையான பட்ஜெட். 2047 ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​இந்தியா தனது பாரதத்தின் இலக்கை நிறைவேற்றும்.

ADVERTISEMENT

இந்த பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்று நான் உறுதியுட சொல்ல முடியும்.

2014 முதல் இது வெளிநாட்டு தலையீடு இல்லாத முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர். இதுவரை எந்த வெளிநாட்டு சக்திகளும் நெருப்பை மூட்ட முயற்சிக்கவில்லை. ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் முன்பும் வெளிநாடுகளில் இருந்து பிரச்சனைகள் எழுப்பப்பட்டு, நாடாளுமன்றம் முடங்கும். இதை நான் கவனித்து வந்திருக்கிறேன்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், அனைத்து எம்.பி.க்களும் நாட்டை வலுப்படுத்த பங்களிப்பார்கள், குறிப்பாக இளம் எம்.பி.க்கள், ஏனெனில் இது அவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. அவர்கள் பரந்த பாரதத்திற்கு சாட்சியாக இருப்பார்கள். மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாம் நிற்போம் என்று நம்புகிறேன்” என்று மோடி பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share