ADVERTISEMENT

“இது மெஸ்ஸியா? இல்ல ‘மெஸ்’ ஆன சிலையா?” – கொல்கத்தாவில் திறக்கப்பட்ட 70 அடி மெஸ்ஸி சிலை! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

messi kolkata statue backlash viral memes 70 foot statue controversy

கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் லியோனல் மெஸ்ஸி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருக்கிறார். அதுவும் கால்பந்தின் தலைநகரம் என்று அழைக்கப்படும் கொல்கத்தாவிற்கு! “மெஸ்ஸி வரார்” என்ற செய்தியே ரசிகர்களைக் குஷிப்படுத்திய நிலையில், அவருக்காகத் திறக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட சிலை இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தையும், கேலி கிண்டலையும் கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT

70 அடி பிரம்மாண்டம்… ஆனா முகம் தான் இடிக்குதே! மெஸ்ஸியின் வருகையைக் கொண்டாடும் விதமாக, கொல்கத்தாவின் லேக் டவுன் (Lake Town) பகுதியில் உள்ள ஸ்ரீபூமி ஸ்போர்ட்டிங் கிளப் சார்பில், சுமார் 70 அடி உயர இரும்புச் சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டது. உலகக்கோப்பையைக் கையில் ஏந்தியபடி இருக்கும் இந்தச் சிலையை, மெஸ்ஸியே காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.

ADVERTISEMENT

ஆனால், சிலை திறக்கப்பட்ட அடுத்த நிமிடமே ட்விட்டர் (X) மற்றும் ஃபேஸ்புக்வாதிகள் தங்கள் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். காரணம்? அந்தச் சிலையில் இருக்கும் முகம் மெஸ்ஸி போலவே இல்லை என்பதுதான்!

நெட்டிசன்களின் அதிரடி கமெண்ட்ஸ்:

ADVERTISEMENT
  • யார் சாமி இவன்?”: “இது மெஸ்ஸி மாதிரியே தெரியலையே… ஏதோ நம்ம ஊரு லோக்கல் பிளேயர் மாதிரி இருக்காரு” என்று சிலர் கலாய்க்கிறார்கள்.
  • மீஷோ மெஸ்ஸி”: ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வரும் தவறான பொருள் போல, “இது மீஷோ (Meesho) மெஸ்ஸி” என்று சிலர் நக்கலடிக்கிறார்கள்.
  • ரித்திக் ரோஷனா?”: சிலர் ஒருபடி மேலே போய், “உலகக்கோப்பையை அர்ஜென்டினா ஜெயிக்கல, பிரேசிலுக்காக ரித்திக் ரோஷன் ஜெயிச்ச மாதிரி இருக்கு” என்று அந்தச் சிலையின் முக அமைப்பைக் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு ஹிஸ்டரி இருக்கு: கொல்கத்தாவில் சிலைகள் சொதப்புவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2017-ல் மரடோனா வந்தபோது வைக்கப்பட்ட சிலையும், பின்னர் வைக்கப்பட்ட மற்றொரு மெஸ்ஸி சிலையும் இதேபோலத் ட்ரோல் மெட்டீரியல் ஆனது குறிப்பிடத்தக்கது. “கலைநயம் முக்கியம் பிகிலு” என்று நெட்டிசன்கள் சிற்பிகளுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

ஸ்டேடியத்திலும் கலாட்டா: சிலை ஒருபக்கம் சர்ச்சையை ஏற்படுத்த, மறுபக்கம் மெஸ்ஸியைப் பார்க்கச் சென்ற ரசிகர்கள் ஸ்டேடியத்தில் ரகளையில் ஈடுபட்டனர். பல்லாயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியும், மெஸ்ஸியைச் சரியாகப் பார்க்க முடியவில்லை என்றும், அவர் சிறிது நேரமே மைதானத்தில் இருந்தார் என்றும் கூறி ரசிகர்கள் நாற்காலிகளை உடைத்துத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

ADVERTISEMENT

மொத்தத்தில்… மெஸ்ஸியின் வருகை ஒரு வரலாற்று நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்தச் சிலை சர்ச்சை மற்றும் மோசமான நிர்வாகம் காரணமாக, அது ஒரு ‘மீம் கன்டென்ட்’ ஆக (Meme Content) மாறிப்போனதுதான் சோகம். பாவம் மெஸ்ஸி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share