மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களை கண்டறிந்து மாதம் 1000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.kalaignar magalir urimai thogai scheme
தமிழக சட்டப்பேரவை நடந்து வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 25) கொங்கு மக்கள் தேசியக் கட்சி உறுப்பினர் ஈஸ்வரன், மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
புதிய தகவல் என்ன? kalaignar magalir urimai thogai scheme
kalaignar magalir urimai thogai scheme
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கக்கூடிய மகளிர் உரிமைத் திட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தில் 1 கோடியே 14 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
அதேநேரம், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டு போனவர்கள் குறித்த செய்தியும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது அரசின் கவனத்துக்கும் வந்திருக்கிறது. kalaignar magalir urimai thogai scheme

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தின் அடிப்படையிலே, பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, உடனடியாக அந்த கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
வரும் ஜூன் மாதம் முதல் 4ஆம் கட்டமாக‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தின் அடிப்படையில், அந்த கோரிக்கைகளைக் கேட்கக்கூடிய பணிகளைத் தொடங்கவிருக்கிறோம். 9,000 இடங்களில் அந்தப் பணி நடைபெறவிருக்கிறது. kalaignar magalir urimai thogai scheme
அந்த சமயத்தில், கலைஞர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் விடுபட்டு போயிருக்கிறதோ, அவர்கள் முறையாக விண்ணப்பித்தால், நிச்சயமாக விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும்”என்று கூறினார். kalaignar magalir urimai thogai scheme