“இந்திய குடியுரிமை வேணாம்… முடிஞ்சா நாட்டை விட்டு ஓடிடுங்க!” – வக்கீலின் வைரல் அட்வைஸ்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

indian lawyer pranay maheshwari leave india viral tweet debate citizenship

“இந்தியாவில் இருந்து வெளியேறுங்கள்… உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காக வேறு ஏதாவது ஒரு நாட்டிற்குக் குடிபெயருங்கள்!”

சமூக வலைதளங்களில் இப்போது ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கும் விவாதம் இதுதான். வழக்கறிஞரான பிரணய் மகேஸ்வரி (Pranay Maheshwari) என்பவர் எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த ஒரு பதிவு, இணையத்தை இரண்டு துண்டுகளாகப் பிளந்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT

வக்கீல் சொன்னது என்ன? பிரணய் மகேஸ்வரி தனது பதிவில், “உங்களால் முடிந்தால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் (Leave India). கூடிய சீக்கிரம் கிளம்பிவிடுங்கள். இந்தியக் குடியுரிமையை விட்டுவிடுங்கள். நூற்றுக்கணக்கான நாடுகள் இந்தியாவை விடச் சிறந்த வாழ்க்கை முறையை (Lifestyle), மரியாதையை மற்றும் தரமான வாழ்க்கையைத் தருகின்றன. அங்குக் சென்று வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்” என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

மேலும், “வெளிநாடுகளில் பிஆர் (PR) வாங்குங்கள். இந்தியக் குடியுரிமையை விடுவதில் தார்மீக ரீதியாக எந்தத் தவறும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

ஏன் இப்படிச் சொன்னார்? மாசுபாடு (Pollution), உள்கட்டமைப்பு குறைபாடுகள், வரிப்பணத்திற்கான பலன் கிடைக்காமை மற்றும் தனிநபர் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மனதில் வைத்தே அவர் இத்தகைய கருத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினர் கட்டும் வரிக்கு ஏற்ற சலுகைகள் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் பலரிடம் உள்ளது.

வெடித்த விவாதம் (ஆதரவும் எதிர்ப்பும்): வக்கீலின் இந்தக் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் குவிந்து வருகிறது.

ADVERTISEMENT
  • ஆதரவு குரல்கள்: “அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? இங்கே நேர்மையாக வரி கட்டினாலும் தரமான சாலை வசதி இல்லை, சுத்தமான காற்று இல்லை. நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும், நிம்மதிக்காகவும் வெளிநாடு செல்வதே புத்திசாலித்தனம்” என்று ஒரு தரப்பினர் ஆதரிக்கின்றனர். சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்தியர் ஒருவர், அங்குள்ள ‘வொர்க் லைஃப் பேலன்ஸ்’ (Work-Life Balance) பற்றிப் பகிர்ந்த வீடியோவும் இந்த விவாதத்திற்குத் தீனி போட்டது.
  • எதிர்ப்புக் குரல்கள்: “இக்கரைக்கு அக்கரை பச்சை” (Grass is greener on the other side) என்று பலர் இதைச் சாடுகின்றனர். “எல்லா நாட்டிலும் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். அமெரிக்கா, ஐரோப்பாவிலும் வேலைவாய்ப்பு திண்டாட்டம், இனவெறி (Racism) மற்றும் அதிக வாழ்க்கைச் செலவு போன்ற பிரச்சனைகள் உள்ளன. குறைகளைச் சுட்டிக்காட்டாமல், இங்கேயே இருந்து நாட்டை முன்னேற்றப் பாருங்கள்” என்று தேசப்பற்றுடன் பலர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

உண்மை நிலவரம் என்ன? வெளிநாடு செல்வது என்பது பலரின் கனவாக இருந்தாலும், அது எல்லோருக்கும் சாத்தியமானதா? விசா கெடுபிடிகள், கலாச்சார மாற்றம் மற்றும் குடும்பத்தைப் பிரிந்து வாழும் வலி ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன. சமீபத்தில் அமெரிக்கா விசா விதிகளில் சமூக வலைதளங்களை ஆய்வு செய்யும் நடைமுறையைக் கொண்டு வந்தது இந்தியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் “நாடு மாறுவது தீர்வல்ல, மனநிலை மாறுவதே தீர்வு” என்று ஒரு தரப்பும், “வாழ்க்கை ஒருமுறைதான், அதைச் சிறந்த இடத்தில் வாழ்வதே சிறப்பு” என்று மறுதரப்பும் மோதிக்கொண்டிருக்கின்றன. நீங்கள் எந்தப் பக்கம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share