ADVERTISEMENT

உலகக்கோப்பை 2025 : அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி!

Published On:

| By christopher

india women reach world cup semifinal as 4th team

ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 தொடரில், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மும்பையின் நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேற்று (அக்டோபர் 23) நடைபெற்ற லீக் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிராக 53 ரன்கள் வித்தியாசத்தில் (டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி) அபார வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தது.

ADVERTISEMENT

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு நான்காவது அணி இந்தியா தகுதிபெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா (109 ரன்கள்) மற்றும் பிரதீகா ராவல் (122 ரன்கள்) ஆகியோர் தங்களின் அபார சதங்களை விளாசி, முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தனர்.

ADVERTISEMENT
ICC WWC : smiriti mandana and prathika raval century agianst nz

மழை குறுக்கீடு காரணமாக இந்தியாவின் இன்னிங்ஸ் 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டபோது, இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் என்ற உலகக் கோப்பைப் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

மீண்டும் மழை காரணமாக, நியூசிலாந்துக்கு டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி 44 ஓவர்களில் 325 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணி, மிடில் ஆர்டரில் விக்கெட்டுகளைத் தவறவிட்டு, 44 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியத் தரப்பில் ரேணுகா சிங் தாக்குர் மற்றும் கிராந்தி கவுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்து, அரையிறுதிக்கு முன்னேறியது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.சி.சி-யின் டை-பிரேக்கர் விதிகளின்படி, சம புள்ளிகள் பெற்றாலும், அதிக வெற்றிகளைக் கொண்டதன் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்குச் செல்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share