கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் என்று விஜய் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.