நடிகர் விஜய் கூட்ட நெரிசல் துயரம் : பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்

Published On:

| By christopher

pm modi condolences for karur stampade

கரூரில் இன்று விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. 6 குழந்தைகள், 16 பெணகள், 9ஆண்கள் என மொத்தம் 31 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின் போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share