ராமதாஸ், அன்புமணி பிரச்சனைக்கு தீர்வு இதுதான்… ஜி.கே.மணி பேட்டி!

Published On:

| By Selvam

gk mani says ramadoss and anbumani

ராமதாஸ், அன்புமணி இருவரும் உட்கார்ந்து மனம் விட்டு பேசினால் தான் சுமூகமான தீர்வு ஏற்படும் என்று பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி இன்று (ஜூன் 15) தெரிவித்துள்ளார்.

தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “கடந்த ஒரு வார காலமாக எனக்கு உடல்நிலை சரியில்லை. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்தேன். இன்று கட்டாயமாக தைலாபுரம் வரவேண்டும் என்று ராமதாஸ் கட்டளையிட்டதால் தான் இங்கு வந்தேன். gk mani says ramadoss and anbumani

ஒரு வாரத்திற்கு முன்பாக ராமதாஸ் சென்னை வந்தார். சென்னையில் ராமதாஸின் மகள் கவிதாவின் இல்லத்தில் அவரை சந்தித்து இரண்டு மணி நேரம் பேசினேன். காலம் தாழ்த்தாமல் விரைவில் சுமூகமான ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸும் விரைவில் சுமூகமான தீர்வு ஏற்படும் என்று சொன்னார்.

அதன்பிறகு ஒரு வார நிகழ்வுகள் மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது. நாங்களும் எவ்வளவோ முயற்சி எடுத்தோம். ஆனால், தீர்வு ஏற்படாமல் காலதாமதமாகிக் கொண்டே இருக்கிறது.

ராமதாஸ், அன்புமணி இருவரும் உட்கார்ந்து மனம் விட்டு பேச வேண்டும். இருவரும் மனம்விட்டு பேசினால் தான் சுமூகமான தீர்வு ஏற்படும். இதுதான் கட்சியில் உள்ள அனைவரின் விருப்பம்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share