ADVERTISEMENT

“இப்போ கரியர்… அப்புறம் குழந்தை!” – டிரெண்டாகும் ‘எக் ஃப்ரீஸிங்’ (Egg Freezing)!

Published On:

| By Santhosh Raj Saravanan

egg freezing trend india benefits cost women fertility health lifestyle

ஒரு காலத்தில் “25 வயசாகுது, இன்னும் கல்யாணம் ஆகலையா?” என்ற கேள்விக்குப் பெண்கள் பதறுவார்கள். ஆனால் இன்று, “30 வயசுக்கு மேலதான் கல்யாணம்… 35-ல் குழந்தை” என்று நிதானமாகச் சொல்கிறார்கள். இந்தத் துணிச்சலுக்குக் காரணம், மருத்துவ உலகில் டிரெண்டாகி வரும் எக் ஃப்ரீஸிங்‘ (Egg Freezing) தொழில்நுட்பம். பிரியங்கா சோப்ரா முதல் பல பிரபலங்கள் வரை இதைச் செய்துகொண்ட பிறகு, இது பற்றிய விழிப்புணர்வு சாமானிய மக்களிடமும் அதிகரித்துள்ளது.

எக் ஃப்ரீஸிங் என்றால் என்ன? பெண்களின் கருமுட்டைகளை (Eggs) இளமைப் பருவத்திலேயே (பொதுவாக 25-35 வயதுக்குள்) வெளியே எடுத்து, மிகக்குறைந்த வெப்பநிலையில் உறைய வைத்துப் பாதுகாக்கும் முறைதான் இது. பிற்காலத்தில், எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாராகிறார்களோ, அப்போது அந்த முட்டைகளை எடுத்து, சோதனைக் குழாய் முறை (IVF) மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

ஏன் இந்தத் திடீர் ஆர்வம்?

  1. பயத்தைத் தள்ளிப்போடலாம்: பெண்களின் ‘பயாலஜிக்கல் கிளாக்’ (Biological Clock) படி, வயது ஏற ஏறக் கருமுட்டைகளின் தரம் குறையும். ஆனால், முட்டைகளை ஃப்ரீஸ் செய்துவிட்டால், அந்த முட்டைகளின் வயது அப்படியே இருக்கும். 30 வயதில் முட்டையைச் சேமித்தவர், 40 வயதில் குழந்தை பெற்றுக்கொண்டாலும், அந்தக் கருவின் ஆரோக்கியம் 30 வயதுடையதாகவே இருக்கும்.
  2. கரியர் முக்கியம்: படிப்பு, வேலை, சொந்த வீடு என்று செட்டில் ஆன பிறகு நிதானமாகத் தாய்மையைத் தழுவ நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
  3. சரியான துணையைத் தேட: “வயசாகிடுச்சுனு அவசரப்பட்டு யாரையோ கல்யாணம் பண்ணிக்கத் தேவையில்லை.” சரியான நபர் கிடைக்கும் வரை காத்திருக்க இது கால அவகாசம் தருகிறது.
  4. மருத்துவக் காரணம்: புற்றுநோய் சிகிச்சைக்குச் செல்பவர்கள், கீமோதெரபி சிகிச்சைக்கு முன் தங்கள் முட்டைகளைச் சேமித்து வைப்பதன் மூலம், சிகிச்சைக்குப் பின் தாய்மையடைவதை உறுதி செய்துகொள்ளலாம்.

கவனிக்க வேண்டியவை: இது ஒரு எளிய ‘இன்சூரன்ஸ்’ போன்றதுதான் என்றாலும், இது மிகவும் செலவு பிடிக்கக்கூடியது. முட்டைகளை எடுப்பதற்கான மருத்துவச் செலவு மற்றும் அதை வருடக் கணக்கில் பாதுகாப்பதற்கான வாடகை எனப் பல லட்சங்கள் செலவாகலாம். மேலும், 100% வெற்றி நிச்சயம் என்றும் சொல்ல முடியாது.

ADVERTISEMENT

தாய்மை என்பது ஒரு கட்டாயம் அல்ல; அது ஒரு விருப்பம். “கல்யாணம் எப்போ? குழந்தை எப்போ?” என்ற சமூகத்தின் அழுத்தத்திற்குப் பயப்படாமல், பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே திட்டமிட இந்தத் தொழில்நுட்பம் ஒரு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share