ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு : அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

Published On:

| By Kavi

ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். DMK membership admission from July 1

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூன் 24) அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது ஆர்.எஸ்.பாரதியிடம் முருகன் மாநாடு தொடர்பாகவும், அதில் ஒளிபரப்பப்பட்ட அண்ணா, பெரியார் வீடியோ தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஆர்.எஸ்.பாரதி, “பொதுமக்கள் கொதித்து போயிருக்கிறார்கள். பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழ்நாடு அரசியலில் தலையெடுத்ததாக வரலாறு கிடையாது. இருபெரும் தலைவர்களை விமர்சித்ததை ரசித்து பார்த்தவர்களை சுயமரியாதை கொண்ட அத்தனை பேரும் கண்டித்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ஒரே மாநாட்டில் எங்களுக்கு ஓட்டுகளை பெற்றுத் தந்துள்ளார்கள்” என்றார்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், ” ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் ஜூலை 1 முதல் 3 வரை உறுப்பினர் சேர்க்கை பணிகள் நடைபெறவுள்ளன. ஜூலை 1ல் திமுக உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். தமிழகத்தில் உள்ள 68 ஆயிரம் பூத்துகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் எல்லா வீடுகளுக்கும் சென்று கட்சி வித்தியாசம் பார்க்காமல் 30 சதவிகித வாக்காளர்கள் திமுகவில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

மேலும் அவர், “தமிழ்நாடு மக்கள் எப்போதுமே ஓரணியில் நின்று அரசியல் கருத்துகளைத் தெரிவிப்பார்கள். வடமொழிக்கு முக்கியத்துவமும், நிதி ஒதுக்கீடும் அதிகம். செம்மொழி தகுதியை பெற்றிருக்கக்கூடிய தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளுக்கு இந்த முக்கியத்துவம் இல்லை” என்றும் கூறினார். DMK membership admission from July 1

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share