இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6,000-த்தை நெருங்குகிறது! மேலும் 4 பேர் பலி!

Published On:

| By Minnambalam Desk

Covid19 India

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,755 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 4 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. COVID-19 Cases Near 6,000 in India

நாட்டின் பல மாநிலங்களில் நாள்தோறும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இன்று ஜூன் 8-ந் தேதி காலை 8 மணியுடனான 24 மணிநேரத்தில் மொத்த கொரோனா பாதிப்பு (ஜனவரி 1 முதல்) எண்ணிக்கை 5,755 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மேலும் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கேரளாவில் அதிகபட்சமாக நேற்று 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதற்கு அடுத்ததாக குஜராத்தில் 102 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 5484.

கொரோனா தொற்றால் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளாவில் மொத்தம் 4 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கொரோனா கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share