நெல்லையில் 2வது முறையாக மத்திய குழு ஆய்வு!

Published On:

| By Monisha

centre committee study in nellai

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை 2வது முறையாக இன்று (ஜனவரி 13) மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது.

வீடுகள், விளைநிலங்களை சூழ்ந்த வெள்ள நீர் அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை செய்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசிடமும் தமிழக அரசு வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டது. இதனையடுத்து தென் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்தது. மேலும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 7 பேர் கொண்ட மத்திய குழு இன்று ஆய்வு செய்து வருகிறது. முன்னதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய குழுவினர் ஆய்வுக் கூட்டம் நடத்தினர். தொடர்ந்து மத்தியக் குழு இரண்டு குழுக்களாக பிரிந்து தற்போது ஆய்வு செய்து வருகின்றது.

முன்னதாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் மத்தியக் குழு ஆய்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்காவது முறையாக ED சம்மன்!

‘ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரல் கேப்டன் மில்லர்”: உதயநிதி ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share