மம்முட்டி, பிரித்விராஜ் படங்களுக்கு ‘நோ’ சொன்ன பாவனா! பின்னணி என்ன?

Published On:

| By Santhosh Raj Saravanan

bhavana said no to mammootty prithviraj

மலையாளத் திரையுலகின் எவர்கிரீன் நாயகி பாவனா (Bhavana), நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரையில் மின்னத் தயாராகிவிட்டார். ‘அனோமி’ (Anomi) என்ற த்ரில்லர் படம் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ள அவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இப்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

ஏன் இந்த நீண்ட இடைவேளை?

ADVERTISEMENT

மலையாள சினிமாவில் ஏன் இவ்வளவு காலம் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு, “வாழ்க்கையில் நான் எதையும் திட்டமிடுவதில்லை. திடீரென்று மலையாள படங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று தோன்றியது,” எனத் தெள்ளத்தெளிவாகப் பதிலளித்துள்ளார்.

பெரிய ஹீரோக்களுக்கு ‘நோ’ சொன்ன பாவனா!

ADVERTISEMENT

பாவனா சினிமாவை விட்டுத் தள்ளியிருந்த சமயத்திலும், அவரைத் தேடிப் பல வாய்ப்புகள் வந்துள்ளன. அதில் மெகா ஸ்டார் மம்முட்டி (Mammootty), டாப் ஹீரோ பிரித்விராஜ் (Prithviraj) மற்றும் ஜெயசூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களும் அடங்கும். “அவர்கள் என்னை அழைத்து ஸ்கிரிப்டையாவது கேட்கச் சொன்னார்கள், ஆனால் நான் ‘நோ’ சொல்லிவிட்டேன். ஏன் வேண்டாம் என்று சொன்னேன் என்பதற்கு என்னிடமே சரியான பதில் இல்லை. அந்த நேரத்தில் எனக்குச் செய்ய விருப்பமில்லை, அவ்வளவுதான்!” என ஓப்பனாகப் பேசியுள்ளார்.

அனோமி – ரிலீஸ் அப்டேட்!

ADVERTISEMENT

ரியாஸ் மராத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அனோமி’ படத்தில், பாவனாவுக்கு ஜோடியாக நடிகர் ரஹ்மான் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இப்படம், வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தனது கேரியரில் எப்போதுமே போல்டான முடிவுகளை எடுக்கும் பாவனாவின் இந்தப் பேட்டி, இப்போது சோஷியல் மீடியாவில் செம ட்ரெண்டிங்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share