மகளிர் சுய உதவி குழு- மாணவர் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உயர்வு, 3 சிலிண்டர்கள்.. அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

Published On:

| By Mathi

EPS Eelection Promise

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

சென்னையில் இன்று பிப்ரவரி 4-ந் தேதி அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

ADVERTISEMENT

அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்:

  • முதியோர் ஓய்வூதியம் ரூ2,000 ஆக உயர்த்தப்படும்
  • மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யபடும்
  • மாணவர்களின் கல்விக் கடனை அரசே ஏற்கும்
  • ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்
  • ஜல்லிக்கட்டில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
  • அரசு அங்கீகரிக்கும் இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும்.
  • மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடகள் தள்ளுபடி செய்யப்படும்.
  • மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

முன்னதாக அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ2,000 வழங்கப்படும் என்பது உள்ளிட்ட முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை கடந்த ஜனவரி 17-ந் தேதி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share