2026 சட்டமன்ற தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது அதிமுக. தொடர்ந்து கூட்டணியை வலுப்படுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியூகம் அமைத்து வருகிறார்.
இந்தநிலையில், அதிமுக ஐடி விங் மாநில, மண்டல, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஜூன் 27, 28 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 23) அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைப்படி, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூன் 27-ஆம் தேதி வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து ஜூன் 28 சனிக் கிழமை காலை 10 மணியளவில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர், மண்டலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
நடைபெற உள்ளது.
இக்கூட்டங்களில், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் குறித்தும், வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிறுத்தி களப்பணி ஆற்றுவது குறித்தும், கருத்துப் பரிமாற்றமும், ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. aiadmk hold it wing meeting
ஆகவே, தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட நாட்களில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.