கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உட்பட 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு இடம் மாற்றம் செய்துள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் மாற்ற விவரம்:
ஆர்.ஜெயா – கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு முயற்சிகள் துறை
காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன்– இயக்குநர், பொருளியல் மற்றும் புள்ளியியல்
செங்கல்பட்டு ஆட்சியர் த.சினேகா– காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன்- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியர் கு.ரவிக்குமார்– கரூர் மாவட்ட ஆட்சியர்
மத்திய அரசு பணியில் இருந்து திரும்பும்
சந்திர சேகர் சாகமூரி– முதன்மை செயல் அலுவலர், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம்
அ.சண்முக சுந்தரம்– செயலாளர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
நே.பொன்மணி– இணை ஆணையர், வணிகவரி, ஈரோடு.
