திமுக கூட்டணி கட்சிகளின் பலத்த விமர்சனங்களுக்கிடையே இந்து முன்னணி சார்பில் மதுரை வண்டியூரில் முருக பக்தர்கள் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்றது. 6 resolution taken in murugan maanadu
இந்த மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மேலும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்தநிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் 6 முக்கிய தீர்மானங்களை இந்து முன்னணி நிர்வாகி கிஷோர் வாசிக்க, அவை நிறைவேற்றப்பட்டன.
1)திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்
2) பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்
3) குன்றம் குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்
4) தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்
5) தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்
6) சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்.