தரச் சோதனையில் தோல்வியடைந்த 186 மருந்துகளை தரமற்றவையாக அறிவித்து அதன் பட்டியலை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) வெளியிட்டது. 186 NSQ drugs list released by CDSCO
நாட்டில் பல்வேறு நோய்களுக்கு விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து நிறுவனங்களின் மாத்திரைகளும் அவ்வபோது மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதன் மூலம் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, அதன் பட்டியல் CDSCO இணையதள பக்கத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் எச்சரிக்கையின்படி நாடு முழுவதும் கடந்த மாதம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

அவற்றில் தரச் சோதனையில் 186 மருந்துகள் நிலையான தரம் இல்லாதவை (NSQ) என கண்டறியப்பட்டன. மொத்தமுள்ள 186ல் 128 பல்வேறு மாநில மருந்துகள் ஆய்வகங்களிலும், 58 மத்திய மருந்து ஆய்வகங்களிலும் அடையாளம் காணப்பட்டன.
இந்த மருந்துகள் பெரும்பாலும் சளித் தொற்று, கிருமித் தொற்று, காய்ச்சல், உயா் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படுபவை என கண்டறியப்பட்டது. இதன்மூலம் இந்த ஆண்டு தரமற்றவையாக இதுவரை கண்டறியப்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை 561ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதனை பொதுமக்கள் இந்த விவரங்களை அந்தத் தளத்தில் அறிந்து கொண்டு விழிப்புணா்வுடன் செயல்படலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைவர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி, CDSCO குறைந்த செயல்திறன் கொண்ட மருந்துகளின் சதவீதத்தை வெகுவாகக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக முன்னதாகக் கூறினார், மாதிரிகள் எடுக்கப்பட்ட மொத்த மருந்துகளில் சுமார் 1.5% மட்டுமே சமீபத்திய ஆய்வுகளில் குறைவான செயல்திறன் கொண்டதாகக் கண்டறியப்பட்டது என்பதைக் குறிப்பிட்டார்.
மருந்து மாதிரிகளை NSQ ஆக அடையாளம் காண்பது, ஒன்று அல்லது மற்றொரு குறிப்பிட்ட தர அளவுருக்களில் மருந்து மாதிரியின் தோல்வியின் அடிப்படையில் செய்யப்படுகிறது. தோல்வி என்பது அரசாங்க ஆய்வகத்தால் சோதிக்கப்பட்ட தொகுப்பின் மருந்து தயாரிப்புகளுக்கு மட்டுமே குறிப்பிட்டது என்றும், சந்தையில் கிடைக்கும் பிற மருந்து தயாரிப்புகள் குறித்து எந்த கவலையும் இல்லை என்றும் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
NSQ-களைத் தவிர, தரம் தொடர்பான சில குறைபாடுள்ள தயாரிப்புகளும் கலப்படம் செய்யப்பட்ட அல்லது போலியான மருந்துகளாக வகைப்படுத்தப்படுகின்றன, அவை கடுமையான பாதகமான எதிர்விளைவுகளையும் மரணத்தையும் கூட ஏற்படுத்தும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.
“NSQ மற்றும் போலியான மருந்துகளை அடையாளம் காணும் இந்த நடவடிக்கை, இந்த மருந்துகள் அடையாளம் காணப்பட்டு சந்தையில் இருந்து அகற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, மாநில கட்டுப்பாட்டாளர்களுடன் இணைந்து வழக்கமான அடிப்படையில் எடுக்கப்படுகிறது,” என்று அறிக்கை கூறுகிறது.
மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக
அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.