’தாத்தா இறப்பதற்கு முன் என்னிடம் கடைசியாக கேட்டது இதுதான்’ – விக்ரம் பிரபு உருக்கம்!

Published On:

| By christopher

vikram prabhu share his emotion connect with sivaji

ஷன்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு , சுஷ்மிதா பட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’லவ் மேரேஜ்’. மீனாட்சி தினேஷ், அருள் தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம், கஜராஜ், கோடாங்கி வடிவேலு, வெற்றியாளர் ராமச்சந்திரன், யாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். vikram prabhu share his emotion connect with sivaji

இப்படம் வரும் நாளை ஜூன் 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் மூத்த நடன இயக்குநர் கலா மாஸ்டருடன் நடந்த நேர்காணலில் விக்ரம் பிரபு பேசினார்.

அதில் திரையுலகில் அறிமுகம் ஆனது எப்படி?, தாத்தா சிவாஜியின் கடைசி காலம் மற்றும் தனது குடும்ப உறவுகள் குறித்து விரிவாக பேசியுள்ளார்.

அவர் “நான் கும்கி படத்தில் நடித்தது எனக்கு அப்பாவுக்கே தெரியாது. நான் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தபோது, இயக்குநர் பிரபு சாலமன் அளித்த பேட்டியில், அவர் சொன்ன ஒன்லைன் கேட்டு, இன்ஸ்பிரேஷன் ஆகி நானே நேரில் சென்று அவரை சந்தித்து பேசினேன். அதன்பிறகு தான் அப்பாவுக்கே நான் நடிக்க போனது தெரியும்” என்றார்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் தாய் கமலாம்மாள் ஆகியோருடன் அவரது மகனும் நடிகருமான பிரபு, அவரது மனைவி புனிதா (பச்சை சேலை அணிந்திருப்பவர்) மற்றும் விக்ரம் பிரபு.

தொடர்ந்து அவர், “எனது சிறு வயதில் நான் அப்பாவை விடவும், தாத்தாவுடன் தான் அதிக நேரம் இருந்துள்ளேன். தாத்தா என்னையும் அருகே வைத்துகொண்டு எப்போதும் ஹாலிவுட் ஆக்சன் படங்களை மட்டும் தான் பார்ப்பார். பள்ளி விட்டு வந்ததும், படம் பார்ப்பது தான் தாத்தாவுக்கும், எனக்கும் பொழுதுபோக்கு.

நான் 2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் கல்லூரி படிப்புக்கு சேர்ந்தபோது தான் தாத்தா இறந்தார். அப்போது அமெரிக்காவில் இருந்து இந்தியா வர 36 மணி நேரம் ஆகும். நான் வருவதற்குள் இறுதிச்சடங்கு முடிந்து விடும் என்பதால், என்னால் வர முடியவில்லை. அந்த ஒருவாரம் வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது.

எனினும் தாத்தா இறப்பதற்கு முன்பாக, அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடி தொலைபேசி மூலம் என்னிடம் பேசினார். அப்போது அவர், “என்னடா இன்னும் இந்தியனா இருக்கியா? பிளடி அமெரிக்கானா ஆயிட்டியா?” என்று கேட்டார். அதற்கு ’நீங்க பாத்து தான் தாத்தா சொல்லனும்’ என கூறினேன். ஆனால் அடுத்த முறை அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share