சில பழைய திரைப்படங்களைப் பார்க்கையில், ‘அப்ப மிஸ் பண்ணிட்டோமோ’ என்று எண்ண வைக்கும் ரகத்தில் இருக்கும். அப்படித் தொலைக்காட்சியில் அவ்வப்போது கண்னில் படுகிற திரைப்படங்களில் ஒன்று ‘வெற்றிவேல்’. சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அண்டர்ரேட்டட்’ படம் இது. Vetrivel First of Sasikumar Underrated Film
வசந்தமணி என்ற புதுமுக இயக்குனர் இயக்கிய இப்படத்தில் பிரபு, நிகிலா விமல், மியா, விஜி சந்திரசேகர், அனந்த் நாக், வர்ஷா பொல்லம்மா, இளவரசு, ரேணுகா, பிரவீணா, தம்பி ராமையா, ராஜேஷ் கோபாலன் உட்படப் பலர் நடித்திருந்தனர். டி.இமான் இசையமைப்பில் ’அடியே உன்னை பார்த்திட’, ’உன்னை போல ஒருத்தரை நான் பார்த்தது இல்ல’ பாடல்கள் மியூசிக் சேனல்களில் அதிகம் வலம் வந்தன.
எஸ்.ஆர்.கதிரின் இயல்பு வாழ்வும் அழகியல் கூட்டும் சினிமாத்தனமும் கலந்த ஒளிப்பதிவு, ஏ.எல்.ரமேஷின் செறிவான கதை சொல்லலை அடிகோடிடுகிற படத்தொகுப்பு, குறிப்பிட்ட பகுதி மக்களின் வாழ்வனுபவங்களை அப்படியே காட்ட முயன்ற முத்துவின் கலை வடிவமைப்பு என்று பல அம்சங்கள் இப்படத்தைச் சிறப்பானதாக ஆக்கியிருந்தன.

உறவுக்குள் தேர்தல் அரசியலால் முளைக்கும் பகை, அதனைத் தீர்க்கப் பல ஆண்டுகளாகத் தன் மனதில் ஒரு பெண் வளர்க்கும் வன்மம், அவற்றுக்கு இரையாகும் வகையில் பாசமிக்க சகோதரர்கள் இருவர் செய்கிற ஒரு இமாலயத் தவறு, அதனால் பாதிக்கப்படும் ஒரு இளம்பெண்ணின் குடும்பம் என்று ‘வெற்றிவேல்’ படத்தில் வலுவான கதை சொல்லல் இருந்தது. Vetrivel First of Sasikumar Underrated Film
நாயகனின் சகோதரர் தனது கல்லூரியில் பயிலும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். விஷயமறிந்து தந்தையைப் பெண் கேட்டு அனுப்புகிறார் நாயகன். ஆனால், அப்பெண்ணின் தந்தை சாதிக் கட்டுப்பாடுகளை மீற முடியாது என்று மறுக்கிறார். அதைக் கேட்டு நாயகனின் தந்தை அமைதியானாலும், அவர் சும்மா இருப்பதில்லை.
திருமண வீட்டில் இருக்கும் சகோதரனின் காதலியைக் கடத்தத் திட்டமிடுகிறார். அதற்குச் சில நண்பர்கள் உதவுகின்றனர். ஆனால், அப்பெண்ணுக்குப் பதிலாக வேறொருவரைக் கடத்துகின்றனர். அவருக்கு அடுத்த நாள் திருமணம் நடக்க இருக்கிறது.
’தவறு செய்துவிட்டோம்’ என்று அவரை மீண்டும் ஊருக்குள் சென்று விட முயற்சிக்கும்போது, அந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்துக்கொண்டது தெரிகிறது. அதையடுத்து, வேறு வழியில்லாமல் அவரைத் திருமணம் செய்துகொள்கிறார் நாயகன்.
நாயகனின் குடும்பம் மீது ஒரு தாயும் மகனும் வன்மமும் கொலைவெறியும் கொள்ள இச்சம்பவங்களே காரணமாகிறது. அந்தப் பெண் அவர்கள் வீட்டில் வாழ்க்கைப்பட வேண்டியவர். Vetrivel First of Sasikumar Underrated Film
அதன்பின்னே சிக்கல்கள் பூதாகரமாகி குடும்பத்தினர் பாதிப்புக்கு உள்ளாகிறபோது நாயகன் என்ன செய்கிறார் என்பதுவே இப்படத்தின் கிளைமேக்ஸ் ஆக உள்ளது.

கமர்ஷியல் பட பார்முலா Vetrivel First of Sasikumar Underrated Film
ஒரு வெற்றிகரமான கமர்ஷியல் படத்திற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இதில் உண்டு. சுமாரான பட்ஜெட்டில் தயாரானபோதும், யதார்த்தம் கலந்த இதன் திரைக்கதை ட்ரீட்மெண்ட் சட்டென்று நம்மைப் படத்தோடு ஒன்ற வைத்துவிடும்.
பிரம்மன், தாரை தப்பட்டை என்று சசிகுமார் முன்னர் நடித்த திரைப்படங்கள் சரிவரப் போகாத காரணத்தினால், தியேட்டர்களில் இப்படம் உரிய கவனிப்பைப் பெறவில்லை. அது மட்டுமல்லாமல், சசிகுமார் நடிக்கிற படங்கள் இப்படித்தான் இருக்குமென்ற ‘பார்முலா’வுக்குள் இப்படம் சிக்கிக்கொண்டது.
போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி போன்ற படங்களைப் போலவே இதுவும் திரையனுபவத்தைத் தந்தது. ஆனால், அவற்றில் இருந்து சசிகுமாரின் பாத்திர வடிவமைப்பும் திரைக்கதை உள்ளடக்கமும் வேறுபட்டிருந்தது. தொலைக்காட்சிகளில் இப்படம் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானபோதே அது ரசிகர்களுக்குத் தெரிய வந்தது.

இப்போதும் ’வெற்றிவேல்’ ஒளிபரப்பாகிறபோது, சமூகவலைதளங்களில் கிடைக்கிற வரவேற்பு அதற்குச் சாட்சி. Vetrivel First of Sasikumar Underrated Film
இப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. தற்போது மலையாளம், தெலுங்கில் வெளியாகிற சில கமர்ஷியல் வெற்றிப்படங்களைக் காணும்போது ‘வெற்றிவேல்’ நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
வழக்கமான ‘கமர்ஷியல் பட பார்முலா’ படி காமெடி, ரொமான்ஸ், சென்டிமெண்ட், ஆக்ஷன் அம்சங்களை கொண்டிருந்தாலும், ‘அடுத்தது என்ன’ என்று கேள்வியை எழுப்பும்விதமாகவே இறுதி வரை இதில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருவேளை இன்றைய சூழலில் வெளியாகியிருந்தால் ‘வெற்றிவேல்’ இன்னும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கலாம்..!