இதுக்கெல்லாம் அழுகையா? – அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

ஈரோட்டுல நம்ம பையன் ஒருத்தன் பைக் டியூ கட்டாததால வங்கி ஊழியர்கள் அவனோட பைக்க பறிமுதல் செஞ்சிருக்காங்க…

நம்ம பையன் பேங்க் வாசல்ல போய் உட்கார்ந்து பைக் தந்தாதான் வீட்டுக்கு போவேன்னு மாங்கு மாங்குன்னு அழுதுருக்கான்…

இனிமேல் பைக் லோன் பார்ம்ல, பணம் கட்டலன்னா பைக் எடுத்துக்குவோம் அதுக்குலாம் அழக்குடாதுன்னு கையெழுத்து வாங்கனும் போல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கோழியின் கிறுக்கல்!!

சில கேள்விகள் கேள்விகளாக இருந்து விடல் நலம், அதற்கான பதில் கேள்வியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியவை!!

வானம்பாடி

ஆடிக்கு அப்பறம் “”ஆவணி”” உனக்கு அழகா இருக்கும் “”தாவணி””

குருநாதா

என்ன பெரிய நாட்டுக்காக தியாகம் நாட்டுக்காக தியானம் பாத்துருக்கியா?

பூவேந்தன்
அப்போ சமூக ஊடக நிலவரம் வேற கள நிலவரம் வேற அப்டிதானே ப்ரண்ட்ஸ் #ExitPoll
சரவணன். ????
யாரும் ஆறுதல் சொல்லாதப்ப நம்மள நாமே ஆறுதல் படுத்திக்குவோம்ல.. அந்த மாதிரி தான் அதிமுகவுக்கு 24 சீட் கிடைக்கும்னு எக்ஸிட் போல்ல கருத்து கணிப்பு போட்டுக்கறது
எனக்கொரு டவுட்டு!?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share