கருப்பு பணம் ஒழிஞ்சிடுச்சி தெரியுமா? – அப்டேட் குமாரு..

Published On:

| By christopher

update kumaru memes and trolls june 21

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ஸ்விஸ் பேங்க்ல இந்தியர்களோட கருப்பு பணம் மூணு மடங்கா அதிகரிச்சத பத்தி பேசிட்டு இருந்தாங்க..

ஒருத்தரு, ’அடேங்கப்பா எப்படி இந்தியாவுல எங்க ஜி கருப்பு பணத்த ஒழிச்சிட்டாரு பாத்தீங்களா’னு சவுண்டு விட்டாரு.

அங்கே இருந்த எல்லாரும் அவரையே திருதிருனு பாக்க, “ஆமா, ஸ்விஸ் பேங்க்ல பணம் ஏறியிருக்குனா, அப்போ இந்தியாவுல கருப்பு பணம் ஒழிஞ்சிடிச்சி தானே அர்த்தம்’னு சொன்னாரு

இத கேட்டதும்… ஆள விடுடா சாமினு அங்க இருந்தவங்க எல்லோரும் அடிச்சிபுடிச்சி எஸ்கேப் ஆயிட்டாங்க… update kumaru memes and trolls june 21

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls june 21

Mannar & company™🕗

மத்திய பிரதேசத்தில் சச்சின் என்ற நபரை கடித்தவுடன் உயிரிழந்த விஷப்பாம்பு

எட்டு வருடங்களாக வேம்பு, மா, நாவல் மரங்களின் குச்சியால் நான் பல் விளக்குவதால் பாம்பு உடல் விஷமாகியிருக்கலாம் என கடிபட்டவர் கருத்து.

~ என்னை கடித்திருந்தால் இத்தனை வருசமா பல் விளக்காததால்னு சொல்லிருப்பேன்!

🤔எனக்கொரு டவுட்டு!?

ஆர்சிபி கப் அடிச்சிருக்கு, சவுத் ஆப்பிரிக்கா கப் அடிச்சி ஒரு பாசிட்டிவ் கொடுத்திருக்கு அது போல நம்ம வாழ்க்கை மாறும்னு மனசுல நினைக்கும் போது கரண்ட் போயிருச்சு..

Joe…😎😎

சங்கீஸ் ~ “முருக மாநாட்டு”க்கு எல்லோரும் வாங்க, முருகனை காப்பாத்துவோம்..

முருகன் be like ~ உங்களை நம்பி ஓட்டு போட்ட மக்களையே காப்பாத்த முடியல.. இதுல நீ என்ன காப்பாத்த போறியா?!

திருப்பூர் சாரதி

நல்லவேளையா இந்தியாவில் எண்ணைக் கிணறுகள் இல்லை…
இருந்திருந்தா நாமளும் பங்கரோட வீடு கட்டவேண்டியதாயிருக்கும்!

இஸ்ரேல் – ஈரான் போர்

வருணன்

Me :~ இனிமேல் கோபப்படக்கூடாதுன்னு முடிவு எடுத்துருக்கேன்.. 😷

Also Me :~ உனக்கு தான் கோபமே வராதேடா.. 🤡

ச ப் பா ணி

தேடிச்செல்லும் போது விலகிச் செல்கிறாய்..

விலகிச்செல்லும் போது தேடி வருகிறாய்..

பொண்ணா மாப்ள..

இல்ல மாமா ‘தூக்கம்’

PalanIgnesh

சமீபத்தில் பழனி சென்றிருந்தேன்… தரிசனத்தைமுடித்துவிட்டு இரவு திருச்சிக்கு பஸ் ஏறினேன்……!!!
நடத்துனர் பயணிகளுக்கு டிக்கட் கொடுத்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் கோபமாக இருப்பதுபோலே இருந்தார்…..

எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர் நடத்துனரிடம் “சார் திருச்சிக்கு டிக்கட் எவ்வளவு….? என்றுகேட்டார்… 127/- என்றார் அவர். உடனே இவர் ” சார் இது பாய்ண்ட் டூ பாய்ண்டா…? என்றார்…..!!!

அவ்வளவுதான் நடத்துனருக்கு வந்ததே கோபம்……”ஏன் சார் பாய்ண்ட் டூ பாய்ண்ட்” ன்னா பறந்து போகுமா…? மத்ததெல்லாம் தரையில் போகுமா…? இஷ்டம் இருந்தால் ஏறுங்க இல்லைன்னா இறங்கிக்கங்க என்றார்…!! (என் அருகில் அமர்ந்திருந்தவர் மிக பொறுமையானவராக இருப்பார்போல..)

சார்… நான் சாதாரணமாகத்தானே கேட்டேன்…! எவ்வளவு நேரத்தில் திருச்சி போகும் என்பதை தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன். ஏன் சார் இவ்வளவு கோபம் என்றார் தன்மையாக…..!!!


கொஞ்சம் உணர்ந்தவராய் நடத்துனர் “என்ன சார் செய்யச்சொல்றீங்க…? காலையில 11 மணிக்கு சாப்பிட்டது சார்…. இப்பத்தான் வந்து நிறுத்தினோம் உடனே திருச்சிக்கு கிளம்பிப்போ என்கிறார்கள்…..!!! என்னதான் சம்பளம் கொடுத்தாலும் நாங்களும் மனுஷங்கதானே….? என்று சொல்லிக்கொண்டே மற்றவர்களுக்கு டிக்கட் கொடுத்துக்கொண்டிருந்தார்…..!!!

என் அருகில் இருந்தவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார் ” நாம அவங்களோட கஷ்டத்தையும் கொஞ்சம் பார்க்கனும் சார். இந்த நான்குமணிநேரம் உற்காந்து வருவதற்கே எவ்வளவு சிரமப்படுகிறோம் நாம்..? நாளெல்லாம் அதிலேயே இருப்பவர்களின் மனம் எப்படி இருக்கும் என்றார்…..!!!

எல்லா மனுஷங்களுக்கும் வரும் இயலாமைதானே கோபம்….? திருச்சிபோய் இறங்கிவிட்டால் அவர் யாரோ…. நாம் யாரோ…. இந்த கொஞ்சநேரத்தில அவரிடம் ஏன் சண்டை போடவேண்டும் என்றார்…!!
அவரின் அணுகுமுறை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதுமட்டுமில்லாமல் ஒரு பிரச்சனை வரும்போது யாரோ ஒருவர் கொஞ்சம் தன்மையாக பேசினால் அந்த பிரச்சனையை குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்பதும் புரிந்தது….!!!

iQKUBAL

சொந்தமா பிசினஸ் பண்ண போறேன்னு சொல்லி வேலையை விட்டு வெளிய வந்ததும்,

திரும்ப பழைய கம்பெனில போய் வேலைக்கு சேர்ந்ததும் ஒரே ஆளா..

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share