சென்னை ஐஐடி-யில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள மாணவி ராஜேஸ்வரியை முதல்வர் ஸ்டாலின் நேரில் பாராட்டி லேப்டாப் மற்றும் இலவச வீடு வழங்கி கெளரவித்தார். Tribal student Rajeshwari
சேலம் மாவட்டம், கல்ராயன்மலையை சேர்ந்த கருமந்துறை, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி அண்மையில் நடைபெற்ற ஜே.இ.இ தேர்வில் அகில இந்திய அளவில் 417 வது இடத்தில் தேர்ச்சி பெற்று சென்னை ஐஐடி-யில் உயர்கல்வி பயில தகுதி பெற்றுள்ளார். Tribal student Rajeshwari
மலைவாழ் இன ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரியின் தந்தை கடந்த 2023-ல் உடல்நல குறைபாடு காரணமாக இறந்துவிட்டார். தாயார் கவிதா, அக்கா ஜெகதீஸ்வரி, அண்ணன் ஸ்ரீ கணேஷ் ஆகியோருடன் கருமந்துறை மலைப்பகுதியில் வசித்து வருகிறார்.
சிறுவயதிலிருந்தே படிப்பில் சிறந்து விளங்கிய மாணவி ராஜேஸ்வரி 10-ஆம் வகுப்பில் 438 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பில் 600-க்கு 521 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். Tribal student Rajeshwari
ராஜேஸ்வரி தனது பள்ளி தலைமை ஆசிரியர் வழிகாட்டுதலின்படி, பழங்குடியின நலத்துறையின் சிறப்பு வகுப்புகளிலும், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செயல்பட்டு வரும் அரசு பயிற்சி மையத்திலும் சேர்ந்து உயர்கல்வி நுழைவுத்தேர்விற்கு தயாராகி வந்தார். Tribal student Rajeshwari
இந்நிலையில், JEE Mains & JEE Advance தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 417 – வது இடத்தில் தேர்ச்சி பெற்று சென்னை ஐ.ஐ.டி.யில் பயில தகுதி பெற்றுள்ளார்.

மேலும், JEE Advanced தொடர்பான கவுன்சிலிங்கிற்காக தற்போது குமிழி ஏகலைவா உண்டு உறைவிட மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பழங்குடியினர் நலத்துறை மூலம் வாசுகி பவுண்டேசன் மூலம் நடத்தப்படும் உயர்கல்விக்கான பயிற்சி பெற்று வருகிறார்.
இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் Aerospace Engineering பாடப்பிரிவில் உயர்கல்வி பயில விருப்பம் தெரிவித்துள்ளார். Tribal student Rajeshwari
இந்தநிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மாணவி ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டி.யில் உயர்கல்வி பயில தகுதிப் பெற்றுள்ளதை அறிந்தவுடன், அவரது உயர்கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என அறிவித்தார்.
இதைனைத் தொடர்ந்து, ஜூன் 12 அன்று சேலம் மாவட்ட சுற்றுப் பயணத்தின்போது, ராஜேஷ்வரியை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்து, பழங்குடியினர் நலத்துறையின் தொல்குடித் திட்டத்தின் கீழ் ரூ.5.73 இலட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினையும், உயர்கல்வி பயில்வதற்கு உதவிடும் வகையில் ரூ.70,000 மதிப்பிலான மடிக்கணினியையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து ராஜேஸ்வரி கூறுகையில்,
“இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன். முதல்வர் ஸ்டாலின் தந்தை இல்லாத எனக்கு தந்தையாக எனது உயர் கல்விச் செலவை ஏற்பதும், வீடு வழங்கியுள்ளதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.