தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC டிஎன்பிஎஸ்சி) குரூப் 1, குரூப் 1 ஏ முதல் நிலைத் தேர்வுகள் இன்று நடைபெறுகின்றன. இத்தேர்வில் 2.49 லட்சம் தேர்வர்கள் பங்கேற்கின்றனர். TNPSC Group-1 and Group-1A exams
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 1A தேர்வுகள்,
- உதவி ஆட்சியர் (Deputy Collector) – 28 காலி பணியிடங்கள்
- காவல்துறை துணை கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police Category – 1)- 7 காலி பணியிடங்கள்
- வணிக வரி உதவி ஆணையர் ( Assistant Commissioner-Commercial Taxes) – 19 காலி பணியிடங்கள்
- ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (Assistant Director of Rural Development)- 7 காலி பணியிடங்கள்
- மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி (District Employment Officer)- 3 காலி பணியிடங்கள்
- தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (Assistant Commissioner of Labour ) – 6 காலி பணியிடங்கள்
- உதவி வனப் பாதுகாவலர் (Assistant Forest Conservator) -2 காலி பணியிடங்கள்)
என மொத்தம் 72 பணியிடங்களுக்கு இன்று ஜூன் 15-ந் தேதி நடத்தப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு 2,49,296 பேர் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வு முறை
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வுகள்
- முதல் நிலைத் தேர்வு
- முதன்மைத் தேர்வு
- நேர்முகத் தேர்வு
ஆகிய 3 நிலைகளில் தேர்வு நடைபெறும். இன்று முதல் நிலைத் தேர்வு நடைபெறுகிறது.
சென்னையில் 170 மையங்கள்
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என மொத்தம் 44 இடங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 170 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 987 பேர் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
டிஎன்பிஸ்சி குரூப்-1 தேர்வு எழுதுகிற தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு ஹால் டிக்கெட்டுடன் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் அல்லது நகலை தேர்வு மையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
காலை 9 மணிக்குப் பின்னர் தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் இத்தேர்வு பகல் 12.30 மணி வரை நடைபெறும்.
இந்த தேர்வு மையங்களில் செல்போன், ப்ளூடூத், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவைகள் அனுமதிக்கப்படமாட்டாது.
சிறப்பு பேருந்துகள்
தமிழ்நாடு முழுவதும் தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் எளிதாக செல்வதற்கு வசதியாக, சிறப்புப் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.