தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், இன்றைய போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும், லைக்கா கோவை கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, லைக்கா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான எஸ்.சுஜய் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் களமிறங்கினர்.
6 பந்துகள் பேட்டிங் செய்து 4 ரன்கள் மட்டுமே எடுத்து சுரேஷ் குமார் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து லைக்கா கோவை கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சாய் சுதர்சன் களமிறங்கினார். சாய் சுதர்சன் மற்றும் எஸ்.சுஜய் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அந்த அணிக்கு அமைத்து கொடுத்தனர்.
பின்னர், சுஜய் 32 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மறுபுறம் சாய் சுதர்சன் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.
அவர்களை தொடர்ந்து அதீக் உர் ரஹ்மான் களமிறங்கினார். அவர் 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ராம் அரவிந்த் 22 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினார். இந்த சீசனில் அதிவேகமாக அரை சதம் விளாசியவர் ராம் அரவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் 22 பந்துகளில் 5 சிக்ஸர் 2 பவுண்டரி என மொத்தம் 50 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். இவ்வாறாக 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ஓவர்களில் லைக்கா கோவை கிங்ஸ் அணி 199 ரன்களை குவித்தது.
தற்போது 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்