பருத்திக்கு உரிய விலை… விவசாயிகளுக்கு வேண்டுகோள்!

Published On:

| By Selvam

தமிழ்நாட்டில் பருத்திக்கு உரிய விலை பெற விவசாயிகள் பருத்தியை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்குக் கொண்டுவந்து விற்பனை செய்து பயன்பெற வேண்டுகோள் என்று வேளாண்மை துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“தமிழ்நாட்டில் பருத்தி சராசரியாக 3.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு 52,700 மெட்ரிக் டன் பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. fair price for cotton

2024-25ஆம் ஆண்டில், மூன்றாவது முன்மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டில் 2.55 லட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு 36,000 மெட்ரிக் டன் பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் நெல் தரிசில் பருத்தி 54,700 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு 7,700 மெட்ரிக் டன் பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. fair price for cotton

ஆர்சிஎச் 659 பிஜி II , ஆர்சிஎச் 386 பிஜி II, சூப்பர்காட் 115 பிஜி II, போன்ற பருத்தி ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டன. நடப்பு ஆண்டில் 4.4 லட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களிலுள்ள 17 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 14,115 விவசாயிகள் மற்றும் 26 வர்த்தகர்கள் பருத்தி பரிவர்த்தனை செய்திட பதிவு செய்துள்ளனர். fair price for cotton

இதுவரை, 9 கோடி ரூபாய் மதிப்பிலான 1,511 மெட்ரிக் டன் பருத்தி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பருத்தியின் தரத்திற்கேற்ப குவிண்டால் ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ.7,700, குறைந்தபட்ச விலையாக ரூ.4.111, சராசரி விலையாக ரூ.5,850 என்ற அளவில் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை தொடர்ந்து பருத்தி பரிவர்த்தனை விற்பனைக்கூடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இயல்பாக பருத்தியின் தரத்திற்கேற்ப ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வியாபாரிகளால் மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக (e-NAM), மறைமுக ஏலமுறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1,976 மெட்ரிக் டன் பருத்தி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

பருத்தியின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுவதால் பருத்தியின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளான ஈரப்பதம் (Moisture), இழை நீளம் (staple length), இழையின் நுண்மைத்தன்மை (Micronaire), முதிர்ச்சி மற்றும் நீண்ட இழை தரக்கூடிய பருத்தி ரகங்கள் குறித்து வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தேசிய பருத்தி வாரியமும் தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. விற்பனைக்கூடங்களுக்கு விவசாயிகள் பருத்தியில் லாபகரமான விலைபெற பருத்தியைத் உலர்த்தி, தரம்பிரித்து அருகிலுள்ள ஒழுங்குமுறை கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மாநில அலுவலர்கள் டெல்டா மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டு, விவசாயிகள் மற்றும், வியாபாரிகளுடன் கூட்டங்கள் நடத்தி, பருத்திக்கு லாபகரமான விலை கிடைக்கச்செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். fair price for cotton

இவ்வாறு பருத்தி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share