ADVERTISEMENT

ஆராய்ச்சி மாணவர்களுக்கு ‘ஜாக்பாட்’… ரூ.1 லட்சம் ஸ்காலர்ஷிப்! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

Published On:

| By Santhosh Raj Saravanan

tn govt phd scholarship 2025 sc st students 1 lakh apply online

“டாக்டரேட் (PhD) முடிக்கணும்னு ஆசை இருக்கு… ஆனா, குடும்பச் சூழல், பணப்பிரச்சினை கழுத்தை நெரிக்குதே!” என்று கவலைப்படும் ஆராய்ச்சி மாணவரா நீங்கள்?

உங்கள் கவலையைப் போக்கவே தமிழக அரசு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது தகுதியுள்ள மாணவர்களுக்குக் கிடைத்தால், அவர்களின் ஆராய்ச்சிக் கனவு தடையின்றி நிறைவேறும்!

திட்டம் என்ன?

ADVERTISEMENT

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2024-25 கல்வி ஆண்டில் புதிதாக முழு நேர (Full-time) முனைவர் பட்டப்படிப்பில் (PhD) சேர்ந்துள்ள மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக்குத் தலா ரூ.1,00,000 (ஒரு லட்சம் ரூபாய்) வீதம் வழங்கப்படும்.

மொத்தம் 2000 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என்பது கூடுதல் மகிழ்ச்சி செய்தி!

ADVERTISEMENT

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்தத் திட்டத்தில் பயன்பெறச் சில முக்கியமான தகுதிகள் உள்ளன:

  • சமூகம்: விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST) அல்லது மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் (SCC) பிரிவைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  • படிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் முழு நேர (Full-time) ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும். பகுதி நேர (Part-time) மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
  • மதிப்பெண்: முதுகலைப் பட்டப்படிப்பில் (PG Degree) குறைந்தது 55% மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வருமானம்: மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: ஆண்களுக்கு அதிகபட்சம் 50 வயதுக்குள்ளும், பெண்களுக்கு 55 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியுள்ள மாணவர்கள், இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

  • சாதிச் சான்றிதழ் (Community Certificate)
  • வருமானச் சான்றிதழ் (Income Certificate)
  • கல்விச் சான்றிதழ்கள் (Educational Certificates & Marksheets)
  • ஆதார் அட்டை நகல் (Aadhaar Card)
  • முனைவர் பட்டப்படிப்புச் சேர்க்கைக்கான சான்று (Admission Proof/Bonafide Certificate).
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உங்கள் கல்லூரி முதல்வர் அல்லது துறைத் தலைவர் வழியாக ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

பிஹெச்.டி (PhD) பண்றது சாதாரண விஷயம் இல்ல, அதுவும் ஃபுல் டைம் பண்றவங்களுக்கு வருமானம் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கும். இந்த 1 லட்சம் ரூபாய் பெரிய ரிலீஃப் கொடுக்கும்.

  • வருமானச் சான்று: நிறைய பேர் அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆகக் காரணமே வருமானச் சான்றுதான். அதுல கவனமா இருங்க, கரெக்டான வருமானத்தைக் குறிப்பிடுங்க.
  • காலேஜ் ஆபீஸ்: ஆன்லைன்ல ஃபார்ம் இருந்தாலும், உங்க காலேஜ் ஸ்காலர்ஷிப் செக்ஷன்ல (Scholarship Section) ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்ளை பண்ணுங்க. அவங்கதான் இதுக்குத் தேவையான போனஃபைட் (Bonafide) எல்லாம் கையெழுத்து போடணும்.

சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

கடைசி நேரம் வரைக்கும் காத்திருக்காதீங்க. மொத்தம் 2000 பேருக்குத் தான் வாய்ப்பு, முந்துபவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share