சுய தொழில் தொடங்கப் போறீங்களா? – உங்களுக்காக அரசு வழங்கும் பயிற்சி!

Published On:

| By Selvam

Self Employment Training 2025

சுய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு, அரசின் திட்டங்களில் பயன்பெற விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. Self Employment Training 2025

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDI) ஒரு நோக்கமுள்ள மற்றும் முழுமையான இரண்டு நாள் பயிற்சி 23.06.2025 முதல் 24.06.2025 வரை அரசுத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் (Detailed Project Reports – DPR) தயாரிக்கும் என்ற தலைப்பில் நடத்தவுள்ளது. Self Employment Training 2025

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், புதிய தொழில்முனைவோர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிரவாகிகள் மற்றும் சுயதொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் ஆகியோருக்காக உருவாக்கப்பட்டுள்ளது. Self Employment Training 2025

மாநில மற்றும் மத்திய அரசுகள் வழங்கும் உதவித் திட்டங்களைப் பற்றிய புரிதலைக் கிடைக்கச் செய்யும் இந்த பயிற்சியில், தகுதி விதிகள், தேவையான ஆவணங்கள், விண்ணப்ப செயல்முறைகள் மற்றும் பின்தொடரும் நடைமுறைகள் ஆகியவை பற்றி விரிவாக கற்றுக் கொள்ள முடியும்.

இப்பயிற்சியில், அரசுத் திட்டங்களில் அவசியமான பகுதியாக உள்ள விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) தயாரிப்பில் செயல்முறை அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சியின் முடிவில், பயனாளிகள் தங்களுக்கேற்ப பொருந்தும் திட்டங்களுக்கு திறமையாக விண்ணப்பிக்கவும், வலுவான திட்ட அறிக்கைகளை தயாரிக்கவும், அரசாங்க ஆதாரங்களை திறம்பட பயன்படுத்தி தங்களுடைய தொழிலை தொடங்கவோ, விரிவுபடுத்தவோ முழுமையாக தயார் நிலையில் இருப்பார்கள்.

Self Employment Training 2025

பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:

அரசுத் திட்டங்களை அடையாளம் காணும் நுட்பங்கள்.

தகுதியான பயனாளர்களுக்கான தேவைகள்.

விண்ணப்பிக்கும் விரிவான நடைமுறைகள்.

ஆவணத் தயாரிப்பு மற்றும் சமர்ப்பிப்பு முறைகள்.

திட்டங்களை எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும்?

பயன்பாட்டு நிலை கண்காணிப்பு மற்றும் தொடர்ந்த செயல் திட்டங்கள்.

அரசு அதிகாரிகளுடன் சரியான அணுகுமுறை.

யார் யார் பங்கேற்கலாம்? Self Employment Training 2025

தொழில்முனைவோர் ஆக விரும்புவோர்

ஆரம்ப கட்டத்தில் உள்ள தொழில் புரிபவர்கள்

தங்களுடைய தொழில்களை விரிவாக்க விரும்பும் சிறு மற்றும் நடுத்தர தொழில் முதலாளிகள்

சுயதொழில் தொடங்க விரும்பும் நபர்கள்.

பயிற்சியின் முடிவில் நீங்கள் பெறவிருப்பது:

அரசுத் திட்டங்களை உறுதியாக புரிந்து கொள்ளும் திறன்.

திட்டத்திற்கு ஏற்ப சரியான ஆவணங்களைத் தயார் செய்யும் அனுபவம்.

நேரடி தொழில் உதவிகளுக்கான வழிகாட்டுதல்.

உங்கள் தொழிலுக்கு தேவையான நிதி மற்றும் ஆதரவை பெறும் நம்பிக்கை.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் https://www.editn.in/ என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை 9543773337 /9360221280 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

EDII, TN வளாககம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம். அரசு சான்றிதழ் வழங்கப்படும் முன்பதிவு அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Self Employment Training 2025
Self Employment Training 2025

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share