மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிய 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய மாவட்டத்திலேயே பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. Female police officers transfer
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவல் ஆளிநர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, மொத்தம் 209 பெண் காவல் ஆளிநர்கள், தங்களது பேறுகால விடுப்பிற்குப் பிறகு, குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஏதுவாக, மற்ற மாநகரம், மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பத்திருந்தனர்.
அதன்படி, 03.06.2025 வரை, பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த 209 பெண் காவல் ஆளிநர்களுக்கும் அவர்கள் விரும்பிய மாநகரம், மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.