தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 46 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்ரவரி 23) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, “
தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட 46 முதலீட்டு திட்டங்களுக்கு ஊக்க சலுகைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.31,592 கோடி முதலீடு உறுதி அளிக்கப்பட்டதுடன், 61,521 நபர்களுக்கு பயனளிக்க திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது.
என்.எம்.பி. மினெபியா நிறுவனம் – செமிகண்டக்டர் (Semiconductor) உற்பத்தி தொடர்பான பல்வேறு செயல்பாடுகள்.
ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ்- செமிகண்டக்டர் உற்பத்திக்கான சாதனங்கள் தயாரிப்பு.
டிக்சன் குழுமம்- மின்னணு சாதனங்கள் உற்பத்தி.
எஸ்.எஃப்.ஓ டெக்னாலஜிஸ் – மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி.
விக்ரம் சோலார் – புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்கலன் சேமிப்பு கட்டமைப்பு (Battery Energy Storage Systems – BESS).
மினெர்வா ஸ்பெஷல் பர்பஸ் வெஹிக்கிள் – கவச வாகனங்கள் (Armored Vehicles) உற்பத்தி.
ஹிகோகி பவர் டூல்ஸ்- மின்னாற்றல் கருவிகள் உற்பத்தி.
ஃபெஸ்டோ – தொழில்துறை தானியங்கி (Industrial Automation) சாதனங்கள் உற்பத்தி.
ஏகஸ் குழுமம்- விமான இயந்திரம் மற்றும் கியர்பாக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிப்பு.
ஷ்னைடர் எலக்ட்ரிக் – குளிரூட்டப்பட்ட சாதனங்கள் உள்ளிட்ட மின் சாதனங்கள் உற்பத்தி.
பாரத் பயோடெக்- உயிர் அறிவியல் பூங்கா அமைத்தல்.
கேட்டர்பிள்ளர் இன்க் – கட்டுமான இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள் உற்பத்தி.
போயிங் – மேம்பட்ட வான்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் புதிய முதலீடுகள்.
செயின்ட் கோபைன்- கண்ணாடித் தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளுக்கு இந்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
