புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 10) திறந்து வைத்து 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 6 முக்கிய அறிவிப்புகள்:
- அறந்தாங்கி வட்டத்தில் இருக்கும் வீரகொண்டான் ஏரி, செங்கலநீர் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
- -கீரமங்கலம் பகுதி விவசாயிகளின் நலன் கருதி, அப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், பழங்களை பாதுகாப்பாக இருப்பு வைத்திட குளிர்ப்பதன கிடங்கு ரூ.1. 60 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும், விளானூர் ஊராட்சி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடகாடு ஊராட்சியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலங்கள் அமைக்கப்படும்.
- புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு ஐ.டி. துறையில் வேலைவாய்ப்புகளை அளிப்பதற்கு புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும்.
- கந்தர்வகோட்டை பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, கந்தர்வகோட்டை ஊராட்சி – பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
- பொன்னமராவதி பேரூராட்சி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பொன்னமராவதி பேரூராட்சி – நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில்
- ரூ. 223 கோடி மதிப்பிலான 577 முடிவுற்ற பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன
- ரூ. 201 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 103 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
- 43, 993 பேருக்கு ரூ.341.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- மொத்தம் ரூ.766 கோடி நலத்திட்டங்கள் மக்களிடம் வழங்கப்பட்டன.
