மனுவை திரும்ப பெறக் கோரிய செந்தில்பாலாஜி : நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By christopher

Senthilbalaji who withdrew the petition: Court order!

செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்ப பெற அனுமதி கோரியதையடுத்து வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 4) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று 58வது முறையாக நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.

இதற்கிடையே சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என செந்தில்பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் அடங்கியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ”இந்த வழக்கை பொறுத்தவரை ஏற்கனவே சாட்சிகள் விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கி விட்டது. எனவே மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதி வேண்டும்” என கோரிக்கையை முன் வைத்தார்.

இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அமெரிக்காவில் சைக்கிளிங்… ராகுல்காந்தி கேள்விக்கு ஜாலியாக பதில் சொன்ன ஸ்டாலின்

சென்னை ரயில்வே தண்டவாளத்தில் முடிந்த கேரள காதல் ஜோடியின் வாழ்க்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share