அதிமுகவின் பொதுச் செயலாளராக தம்மை உரிமை கோரி வரும் சசிகலா, 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் சசிகலா. ஆனால் தம்மை அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோரி நீதிமன்ற கதவுகளை தட்டியவர் சசிகலா. தற்போதும் அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்தி வருகிறார். Sasikala BJP-AIADMK Alliance
அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்ற தடை உத்தரவு பெற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு, சசிகலாவுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகளில் தீவிரம் காட்டவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டு வந்தது.
தற்போது பாஜக- அதிமுக கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. பாஜக, அதிமுக தரப்பு சமாதான முயற்சிகளைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய சசிகலா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் பிரசார களத்தில், தமிழ்நாட்டில் மீண்டும் ‘அம்மா’ (ஜெயலலிதா) ஆட்சி அமைய அதிமுக- பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்பதுதான் சசிகலாவின் பிரசாரமாக இருக்குமாம். 234 தொகுதிகளிலும் சசிகலா தேர்தல் பிரசாரம் செய்வாராம்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரே சசிகலாவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் இருக்கும் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.