சாதி மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. Recommendation to the government
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “நான் எனது குழந்தைகளுக்கு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்தச் சலுகைகளையும் கேட்கப் போவதில்லை. அதனால் என் குழந்தைகளுக்கு சாதி மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என்று திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதை எதிர்த்து சந்தோஷ் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஜூன் 11) நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோவை, அம்பத்தூர் தாசில்தார்கள் சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கியிருக்கின்றனர். அதுபோல் மனுதாரருக்கு ஒரு மாதத்தில் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
சாதி ரீதியிலான பாரபட்சத்தை எதிர்த்து போராடி வரும் நிலையில், இதுபோன்று சான்றிதழ் கேட்டதற்கு மனுதாரர் சந்தோஷுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
சாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி, உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று அரசுக்கும் நீதிபதிகள் பரிந்துரை செய்தனர். Recommendation to the government