புதுவையில் பாஜக அமைச்சர் ராஜினாமா… பின்னணி என்ன? – அடுத்த பாஜக தலைவர் யார்?

Published On:

| By vanangamudi

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், பாஜக நியமன எம்.எல்.ஏ-க்கள் வெங்கடேசன், அசோக் பாபு, வி.பி.ராமலிங்கம் ஆகியோர் இன்று (ஜூன் 27) சபாநாயகர் செல்வத்திடம் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.

அதேபோல, பாஜகவை சேர்ந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமாரும் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜிமா செய்தார்.

இந்த திடீர் ராஜினாமா தொடர்பாக புதுச்சேரி பாஜக வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது,

“நியமன எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்த வி.பி.ராமலிங்கம் முதலியார், அசோக் பாபு ரெட்டியார், வெங்கடேசன் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

புதுச்சேரியில் வாக்கு அறுவடை செய்யும் வகையிலும் கட்சியை அனைத்து பகுதிகளிலும் பரவலாக்கும் வகையிலும் பாஜக தலைமை முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா புதுவையில் முகாமிட்டு அனைத்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வந்தார்.

இந்தசூழலில் நியமன எம்.எல்.ஏ-க்கள் மூவரையும் அமைச்சர் சாய் சரவணனையும் நிர்மல் குமார் சுரானா ராஜினாமா செய்ய சொன்னார். சாய் சரவணனுக்கு பதிலாக அமைச்சரவையில் பாஜக எம்.எல்.ஏ ஜான் குமாருக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல நியமன எம்.எல்.ஏ-க்களில் புதிதாக பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த தீபான்ஜன் நியமிக்கப்பட உள்ளார். இவர் பொதுப்பணித்துறையில் ஜேஇ-ஆக பணியாற்றினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சீட் கிடைக்காததால் பாஜகவுக்கு தாவினார்.

அதேபோல முதலியார் பேட்டையை சேர்ந்த செல்வம் (வன்னியர்), காரைக்காலை சேர்ந்த சேர்ந்த ஜி.என்.எஸ் ராஜ சேகர் (கிராமணி ( நாடார்)) ஆகியோரை நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமிக்க முடிவு செய்துள்ளனர். puducherry bjp minister sai saravana kumar resign background

தற்போது பாஜக தலைவராக இருக்கும் முதலியார் சமுதாயத்தை சேர்ந்த செல்வ கணபதியை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சாய் சரவணனுக்கு மாநில தலைவர் பதவி கொடுக்க தலைமை முடிவு செய்துள்ளது.

ஆனால், அந்த பதவிக்கு நியமன எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த வி.பி.ராமலிங்கம் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர். இன்னொரு பக்கம் உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய நமச்சிவாயமும் முதல்வர் கனவோடு தான் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்தார்.

ஆனால், அவருக்கு முதல்வர் பதவியோ துணை முதல்வர் பதவியோ கிடைக்கவில்லை. உள்துறை, பொதுப்பணித்துறைகளே ஒதுக்கப்பட்டது. அவரும் மாநில தலைவர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். இவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்.

நியமன எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த ராமலிங்கம், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சாய் குமார் இருவரில் ஒருவருக்கு மாநில தலைவர் பதவி உறுதி என்கிறார்கள்” பாஜக வட்டாரங்களில். puducherry bjp minister sai saravana kumar resign background

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share