அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசி வருகிறார்.
இன்னும் சற்று நேரத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
இன்று காலை விசிகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது தேமுதிகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
ஏற்கனவே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டு அக்கட்சி பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்.பி ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
