பயங்கரவாதிகளுக்கு பதிலடி… முப்படைக்கு முழு சுதந்திரம்… ஒன்றரை மணி நேர கூட்டத்தில் மோடி

Published On:

| By Aara

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை இன்று  (ஏப்ரல் 29) பிரதமர் மோடி நடத்தினார்.

இதில்,   ​​இந்தியாவின் எதிர்வினை முறை, இலக்குகள்,  சரியான நேரம் ஆகியவற்றைத் தீர்மானிக்க ஆயுதப் படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். PM modi full operational freedom to forces

இந்தியாவே அதிர்ந்த இந்த கொடூரத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ‘நினைத்துப் பார்க்க முடியாத தண்டனையை இந்தியா அளிக்கும்’ என்று கூறினார்.

இந்நிலையில்  பிரதமர் நரேந்திர மோடி  தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று  பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தலைவர்கள் – ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைமைத் தளபதி அமர் ப்ரீத் சிங் ஆகியோர்  உள்ளிட்ட பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடந்தது.

முன்னதாக, மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் மூன்று துணை ராணுவப் படைகளின் (NSG, BSF மற்றும் அசாம் ரைபிள்ஸ்) தலைவர்கள் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. PM modi full operational freedom to forces

இதில் பயங்கரவாதிகளை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளில் முப்படைகளும் இணைந்து செயல்படுவதற்கும்,  இந்தியாவின் எதிர்வினை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும், இலக்குகள் என்ன,  எந்த நேரம் என்பது பற்றி முடிவெடுப்பதற்கான முழு சுதந்திரத்தையும்  பாதுகாப்புப் படைகளுக்கு அளிப்பதாக பிரதமர் தெரிவித்ததாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share