இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்கள் மேலும் 290 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு டெல்லி வந்தடைந்தனர். Operation Sindu: 290 Indians evacuated from Iran arrives in Delhi
இஸ்ரேல்- ஈரான் இடையேயான யுத்தத்தால் ஈரானில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தவித்து வருகின்றனர். ஈரானில் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு, “Operation Sindhu” என்ற பெயரில் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏற்கனவே 110 இந்தியர்கள் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று ஜூன் 21-ந் தேதி மேலும் 290 இந்தியர்கள், டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியர்கள், ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்- பாரத் மாதா கீ ஜே என முழக்கங்களை எழுப்பி நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.