யாரும் தப்பமுடியாது: அருண் ஜெட்லி!

Published On:

| By Balaji

வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பட்டியலை, பனாமா சட்ட நிறுவனத்திடமிருந்து பெற்று மொசாக் பன்சிகா என்ற நிறுவனம் அண்மையில் வெளியிட்டது.

500க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய இந்தப் பட்டியலில், பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய், டிஎல்எப் குழுமத்தின் உரிமையாளர் கே.பி.சிங் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உட்பட ஏராளமானவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்திய விவரங்களை வரவேற்றுள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ”பிரதமரின் ஆலோசனைப்படி, சீபிடீடி மற்றும் ஆர்பிஐ உட்பட பன்முகமைக்குழு இந்த விவரக் கசிவுகளை ஆராய்ந்து அதன்மீது நடவடிக்கை எடுக்கும். இந்த நடவடிக்கைகளில் இருந்து யாரும் தப்பமுடியாது” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share